கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகர்ப் பகுதியில் பசவேஷ்வரா என்ற தனியார் கல்லூரி செயல்பட்டுவருகிறது. மூன்று தினங்களுக்கு முன், அக்கல்லூரியின் விரிவுரையாளர், வகுப்பறையில் வைத்து சக மாணவர்கள் மத்தியில் ஒரு மாணவனைச் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பான காணொலி பதிவு தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க சக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.