ETV Bharat / bharat

’ஆளுமைக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை’ - கனிமொழி எம்.பி.

புதுச்சேரி: ஆளுமைக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் இல்லை என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 21, 2019, 3:36 PM IST

kanimozi MP pressmeet

வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின் சவால்கள் பற்றிய கருத்தரங்கு புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி சமூக அறிவியல் நிறுவனமும் கேரளா நிதி மற்றும் வரிகள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கனிமொழி எம்.பி.

நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, ”நேரடித் தேர்தல் என்றால் வெற்றிபெற முடியாது என்பதால், அதிமுக மறைமுகத் தேர்தலை கொண்டு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியே எனக்கு கிடைக்கவில்லை. அந்த நிலையில்தான் நாட்டின் நிதி நிலைமை உள்ளது. ஆளுமைக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை

வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின் சவால்கள் பற்றிய கருத்தரங்கு புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி சமூக அறிவியல் நிறுவனமும் கேரளா நிதி மற்றும் வரிகள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கனிமொழி எம்.பி.

நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, ”நேரடித் தேர்தல் என்றால் வெற்றிபெற முடியாது என்பதால், அதிமுக மறைமுகத் தேர்தலை கொண்டு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியே எனக்கு கிடைக்கவில்லை. அந்த நிலையில்தான் நாட்டின் நிதி நிலைமை உள்ளது. ஆளுமைக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை

Intro:ஆளுமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்


Body:வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின் சவால்கள் பற்றிய கருத்தரங்கு புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது
புதுச்சேரி சமூக அறிவியல் நிறுவனமும் கேரளா நிதி மற்றும் வரிகள் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தரங்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இந்நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி ,

எந்த ஒரு முக்கிய விவகாரங்களிலும் மாநில அரசுகள் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக நிதி கொடுக்கப்படவில்லை நிதி பற்றாக்குறையால் புதுச்சேரி மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார் நிதி இல்லாமல் பல்வேறு சிக்கல்களில் தவிக்கிறோம் மத்திய அரசிடமிருந்து போதுமான ஆதரவு புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை என்று முதல்வர் நாராயணசாமி பேசினார்

இதைதொடர்ந்து கருத்தரங்கில் பேசிய கனிமொழி எம்பி ....
ஜிஎஸ்டி வருவாய் பல மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை இதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கவில்லை என்றார்


இதை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த கனிமொழி எம்பி. நேரடித் தேர்தல் என்றால் வெற்றி பெற முடியாது என்பதால் அதிமுக மறைமுக தேர்தல் கொண்டு வந்துள்ளது நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் நிதியே கிடைக்கப்பெறவில்லை நிதி நிலைமை அப்படி உள்ளது அரசியலுக்கு வந்த பின் ரஜினி கமல் கருத்துக்களை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியவர் பாருக் அப்துல்லாவை விடுதலை செய்து பாராளுமன்றம் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது மத்திய அரசு கேட்க வேண்டும் அதிமுக தேர்தல் நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று கூறியவர். ஆளுமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்


Conclusion:ஆளுமைக்கான வெற்றிடம் தமிழகத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.