ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமி, மாலை பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த மூன்று நபர்கள் கடத்தி புதிதாகக் கட்டப்படும் கட்டடத்தின்கீழ் வைத்து பாலியல் வன்புணர்வுசெய்தனர்.
இதுமட்டுமின்றி இச்சம்பவத்தை தனது செல்போனில் அவர்கள் படம்பிடித்துள்ளனர். இதை வெளியே கூறினால் காணொலியை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டினர்.
இதனால், அச்சமடைந்த சிறுமி பயத்தில் வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். அடுத்த நாள் காலை சிறுமிக்கு அதீத வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த பிறகுதான் உண்மைகள் வெளிவந்தன.