காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் காஷ்மீர் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (அரசியல் அமைப்பு சட்டம்- 370 பிரிவு) உடனடியாக நீக்கப்படுகிறது என்றார்.
மேலும், அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. இதில், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக மாநிலங்களவையில் கடும் அமளி நிலவுகிறது.