ETV Bharat / bharat

இந்தியாவில் கோவிட்-19 இறப்பு விழுக்காடு குறைவு - சுகாதார அமைச்சகம்

டெல்லி: ஒரு லட்சம் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால், அதில் உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் கோவிட்-19ஆல் குறைவான உயிரிழப்பு பதிவு செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jun 23, 2020, 9:28 PM IST

India
India

கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 933 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 215 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நேற்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், "ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பிரிட்டனில் கோவிட்-19 இறப்பு விழுக்காடு 63.13ஆக உள்ளது. இது முறையே ஸ்பெயினில் 60.60, இத்தாலியில் 57.19, அமெரிக்காவில் 36.30, ஜெர்மனி 27.32, பிரேசில் 23.68, ரஷ்யா 5.62 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சரியான நேரத்தில் பரிசோதனை செய்தல் மற்றும் கண்காணிப்பு, மருத்துவமனைகளின் சிறப்பான செயல்பாடுகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 30.4 விகிதத்திலேயே கரோனா தொற்று உள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் குணமடைபவர்களின் விகிதம் 53.38 விழுக்காடாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 994 பேரும், மொத்தமாக இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 189 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 14 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள 992 ஆய்வகங்களில் இதுவரை 71 லட்சத்து 37 ஆயிரத்து 716 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்தப்படியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் இறப்பு விகிதத்தில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளதாக உலகம் முழுவதும் கோவிட்-19 தரவுகளை மேற்கொண்டு வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து - வெளியிடும் பதஞ்சலி நிறுவனம்!

கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 933 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 215 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நேற்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், "ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பிரிட்டனில் கோவிட்-19 இறப்பு விழுக்காடு 63.13ஆக உள்ளது. இது முறையே ஸ்பெயினில் 60.60, இத்தாலியில் 57.19, அமெரிக்காவில் 36.30, ஜெர்மனி 27.32, பிரேசில் 23.68, ரஷ்யா 5.62 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சரியான நேரத்தில் பரிசோதனை செய்தல் மற்றும் கண்காணிப்பு, மருத்துவமனைகளின் சிறப்பான செயல்பாடுகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 30.4 விகிதத்திலேயே கரோனா தொற்று உள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் குணமடைபவர்களின் விகிதம் 53.38 விழுக்காடாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 994 பேரும், மொத்தமாக இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 189 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 14 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள 992 ஆய்வகங்களில் இதுவரை 71 லட்சத்து 37 ஆயிரத்து 716 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்தப்படியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் இறப்பு விகிதத்தில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளதாக உலகம் முழுவதும் கோவிட்-19 தரவுகளை மேற்கொண்டு வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து - வெளியிடும் பதஞ்சலி நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.