புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (ஜூன் 17) ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 28 பேரும் காரைக்காலில் இருவரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை புதுச்சேரியில் 216 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 246ஆக அதிகரித்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். இதனால், புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க...நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டணமில்லா இணையதள பயிற்சி: முதலமைச்சர் தொடங்கிவைப்பு