ETV Bharat / bharat

1984 சீக்கிய கலவரம்: மவுனம் கலைத்தார் மன்மோகன் சிங்!

டெல்லி: 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

author img

By

Published : Dec 6, 2019, 3:43 PM IST

If Narsimha Rao heeded to Gujral's advice, 1984 riots could have been avoided: Manmohan Singh
If Narsimha Rao heeded to Gujral's advice, 1984 riots could have been avoided: Manmohan Singh

முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் 100ஆவது பிறந்தநாள் விழா டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, “ஐ.கே. குஜ்ரால் அற்புத திறமைகள் நிறைந்த தலைவர். அவருடனான எனது நட்பு நீண்டகாலம் தொடர்ந்தது. அவர் திட்ட அமைச்சராக இருந்தபோது நான் பொருளாதார ஆலோசகராக இருந்தேன்.

அதன்பின்னர் எங்களின் நட்பு வளர்ந்தது. 1975ஆம் ஆண்டு அவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது செய்தி, தலையங்கங்களை தணிக்கை செய்ய மறுத்தார். இதனால் அவர் 1976 முதல் 1980ஆம் ஆண்டுவரை சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.

அண்டை நாடுகளுடான நல்லுறவை பேணுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். இதுதொடர்பாக ஐந்து கொள்கைகளை முன்முனைந்தார். பின்னாள்களில் இது குஜ்ரால் கொள்கை என அழைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு (சீக்கிய படுகொலை) நடந்த படுகொலை மிகவும் கொடூரமானது. அப்போதைய உள் துறை அமைச்சர் நரசிம்ம ராவிற்கு சில ஆலோசனைகளை ஐ.கே. குஜ்ரால் வழங்கினார்.

நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசு ராணுவத்தை விரைவாக அழைப்பது அவசியம் எனக் கூறினார். அவரின் ஆலோசனையை கேட்டிருந்தால் 1984ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்” என்றார்.

ஐ.கே. குஜ்ரால் ஏப்ரல் 1997 முதல் மார்ச் 1998 வரை இந்தியாவின் 12ஆவது பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் ஐந்து கொள்கைகள் போற்றுதலுக்குரியது. தனது பதவிக் காலத்தில் சில சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். 2012 நவம்பர் 30ஆம் தேதி தனது 93ஆவது வயதில் வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நான் இந்துவும் அல்ல; முஸ்லிமும் அல்ல' - குருநானக்கை நினைவுகூர்ந்த மன்மோகன் சிங்!

முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் 100ஆவது பிறந்தநாள் விழா டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, “ஐ.கே. குஜ்ரால் அற்புத திறமைகள் நிறைந்த தலைவர். அவருடனான எனது நட்பு நீண்டகாலம் தொடர்ந்தது. அவர் திட்ட அமைச்சராக இருந்தபோது நான் பொருளாதார ஆலோசகராக இருந்தேன்.

அதன்பின்னர் எங்களின் நட்பு வளர்ந்தது. 1975ஆம் ஆண்டு அவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது செய்தி, தலையங்கங்களை தணிக்கை செய்ய மறுத்தார். இதனால் அவர் 1976 முதல் 1980ஆம் ஆண்டுவரை சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.

அண்டை நாடுகளுடான நல்லுறவை பேணுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். இதுதொடர்பாக ஐந்து கொள்கைகளை முன்முனைந்தார். பின்னாள்களில் இது குஜ்ரால் கொள்கை என அழைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு (சீக்கிய படுகொலை) நடந்த படுகொலை மிகவும் கொடூரமானது. அப்போதைய உள் துறை அமைச்சர் நரசிம்ம ராவிற்கு சில ஆலோசனைகளை ஐ.கே. குஜ்ரால் வழங்கினார்.

நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசு ராணுவத்தை விரைவாக அழைப்பது அவசியம் எனக் கூறினார். அவரின் ஆலோசனையை கேட்டிருந்தால் 1984ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்” என்றார்.

ஐ.கே. குஜ்ரால் ஏப்ரல் 1997 முதல் மார்ச் 1998 வரை இந்தியாவின் 12ஆவது பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் ஐந்து கொள்கைகள் போற்றுதலுக்குரியது. தனது பதவிக் காலத்தில் சில சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். 2012 நவம்பர் 30ஆம் தேதி தனது 93ஆவது வயதில் வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நான் இந்துவும் அல்ல; முஸ்லிமும் அல்ல' - குருநானக்கை நினைவுகூர்ந்த மன்மோகன் சிங்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/delhi/if-narsimha-rao-heeded-to-gujrals-advice-1984-massacres-could-have-been-avoided-manmohan-singh/na20191205104607602


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.