ETV Bharat / bharat

ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவமனை முன்னாள் ஊழியர் போராட்டம் - tamilnadu latest news

புதுச்சேரி: ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவமனை முன்னாள் ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு மருத்துவமனை முன்னாள் ஊழியர் போராட்டம்
அரசு மருத்துவமனை முன்னாள் ஊழியர் போராட்டம்
author img

By

Published : Feb 2, 2021, 12:32 PM IST

புதுச்சேரி மாநில அரசு மகாத்மா காந்தி தொழுநோய் மருத்துவமனையில் ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மாரியம்மாள். இவருக்கு ஓய்வூதிய கோப்புகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மாரியம்மாளின் கணவர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கணவர் உயிரிழப்பிற்கு காரணமான உதவி இயக்குநர் ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பெண் அரசு மருத்துவமனை முன்பு சுமார் 2 மணி நேரம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: என்டிசி ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

புதுச்சேரி மாநில அரசு மகாத்மா காந்தி தொழுநோய் மருத்துவமனையில் ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மாரியம்மாள். இவருக்கு ஓய்வூதிய கோப்புகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மாரியம்மாளின் கணவர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கணவர் உயிரிழப்பிற்கு காரணமான உதவி இயக்குநர் ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பெண் அரசு மருத்துவமனை முன்பு சுமார் 2 மணி நேரம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: என்டிசி ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.