ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு பகுதியில் வசித்து வருபவர் மகேந்திர சிங். இவர் ஒரு வருடத்திற்கு முன்பே, தனது மகள் ரீனா திருமணத்தை ஊர் மக்கள் ஆச்சரியம் படும் வகையில் பிரமாண்டமாகச் செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தார்.
அதைப் போல், ரீனாவிற்கும் சந்தீப் லம்பா என்பவருடன் திருமணம் பிரமாண்டமாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, புதுமண தம்பதி சந்தீப் - ரீனா இருவரும் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள அஜித்புரா கிராமத்திலிருந்து சுல்தானாக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். ஹெலிகாப்டரை பார்க்க அப்பகுதியில் குவிந்த மக்கள் கூட்டம் திருவிழா போல் காட்சியளித்தது
இதுகுறித்து மணமகளின் தந்தை மகேந்திர சிங் கூறுகையில், "நான் இதை ஒரு வருடம் முன்பு திட்டமிட்டு, திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே எனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுமண தம்பதி சேற்றில் புரண்டு புரண்டு எடுத்த ஃபோட்டோஷூட்டு!