ETV Bharat / bharat

மேற்குவங்கத்திற்கு செல்லும் தேர்தல் ஆணையத்தின் குழு!

author img

By

Published : Dec 16, 2020, 3:49 PM IST

டெல்லி: மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் குழு மேற்குவங்கத்திற்கு செல்லவுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற வாகனம் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து கண்காணிக்க மூன்று நாள் பயணமாக தேர்தல் ஆணையத்தின் குழு நாளை (டிசம்பர் 17) மேற்குவங்கத்திற்கு செல்லவுள்ளது.

மூத்த அரசு அலுலர்களிடம் ஆலோசனை

மேற்குவங்கத்திற்கு செல்லும் குழுவில் துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், மற்ற மூத்த அலுவலர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 17ஆம் தேதி, மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து மேற்குவங்கத்தின் மூத்த அலுவலர்களிடம் அக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது. மத்திய கொல்கத்தாவின் மாவட்ட மாஜிஸ்திரேட், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோரையும் அக்குழு சந்திக்கவுள்ளது.

தலைமை செயலர் அலபன் பாண்டியோபாத்யாய், உள்துறை செயலர் எச்.கே. திவேதி, சுகாதாரத்துறை செயலர் என்.எஸ். நிகம், காவல் இயக்குநர் விரேந்திரா ஆகியோரை சுதீப் ஜெயின் சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட மாஜிஸ்திரேட்கள் ஆகியோருக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், வாக்காளர் சரிபார்ப்பு பணி முறையாக நடைபெற்றுவருகிறதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

பாதுகாப்பு படை குவிப்பு?

மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, பாதுகாப்பு படையினரை முன்னதாகவே குவிக்க தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற வாகனம் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து கண்காணிக்க மூன்று நாள் பயணமாக தேர்தல் ஆணையத்தின் குழு நாளை (டிசம்பர் 17) மேற்குவங்கத்திற்கு செல்லவுள்ளது.

மூத்த அரசு அலுலர்களிடம் ஆலோசனை

மேற்குவங்கத்திற்கு செல்லும் குழுவில் துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், மற்ற மூத்த அலுவலர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 17ஆம் தேதி, மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து மேற்குவங்கத்தின் மூத்த அலுவலர்களிடம் அக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது. மத்திய கொல்கத்தாவின் மாவட்ட மாஜிஸ்திரேட், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோரையும் அக்குழு சந்திக்கவுள்ளது.

தலைமை செயலர் அலபன் பாண்டியோபாத்யாய், உள்துறை செயலர் எச்.கே. திவேதி, சுகாதாரத்துறை செயலர் என்.எஸ். நிகம், காவல் இயக்குநர் விரேந்திரா ஆகியோரை சுதீப் ஜெயின் சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட மாஜிஸ்திரேட்கள் ஆகியோருக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், வாக்காளர் சரிபார்ப்பு பணி முறையாக நடைபெற்றுவருகிறதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

பாதுகாப்பு படை குவிப்பு?

மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, பாதுகாப்பு படையினரை முன்னதாகவே குவிக்க தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.