கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் குன்ச்சிகானல் தாலுகாவிற்குட்பட்ட வனப்பகுதியில் தனியாக இருந்த நாய் ஒன்றை, அங்கிருந்த சிறுத்தை தாக்க முயற்சித்தது. அப்போது அதனை எதிர்த்த அந்த நாய் சிறுத்தையுடன் சண்டையிட்டது. பின்னர் அச்சிறுத்தை நாயை விட்டுவிட்டு ஓடிவிட்டது.
இச்சம்பவத்தை அருகிலிருந்தவர்கள் தங்களது ஃபோனில் படம்பிடித்து பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.