ETV Bharat / bharat

எல்லையில் அமைதி திரும்புமா?

author img

By

Published : Jul 8, 2020, 5:36 PM IST

இந்திய, சீன நாடுகள் கிழக்கு லடாக் பகுதியில் தங்களின் ராணுவத்தை முழுவதுமாக திரும்பபெற்றுள்ள நிலையில், அமைதி திரும்புமா என கேள்வி எழுந்துள்ளது.

இந்திய சீன
இந்திய சீன

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்பு கொண்டது.

இதனிடையே, கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் ,வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவந்தது. பதற்றத்தை குறைக்கும் நோக்கில், உயர் மட்ட ராணுவ அலுவலர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.

கடந்த மூன்று நாள்களாக ஹாட் ஸ்பிரிங், கோக்ரா பகுதிகளில் நடைபெற்றுவந்த திரும்பப்பெறும் நடவடிக்கை இன்று(ஜூலை 8) நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 2 கி.மீ., தொலைவு சீனா தனது ராணுவத்தை பின்வாங்கியுள்ளதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கூடாரங்களை முழுவதுமாக நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மோதல் வெடித்த பகுதியிலிருந்து 1 முதல் 1.5 கிமீ தொலைவு வரை இரு நாட்டு ராணுவமும் தங்களின் படைகளை திரும்பப்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளனர். ராணுவத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், கல்வான் பள்ளத்தாக்கில் உயர் ரக பாதுகாப்பு வாகனங்களை சீனா திரும்பப்பெறாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - சீனா எல்லையில் 60 கம்பெனிகளின் ஐடிபிபி படையினர் குவிப்பு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்பு கொண்டது.

இதனிடையே, கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் ,வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவந்தது. பதற்றத்தை குறைக்கும் நோக்கில், உயர் மட்ட ராணுவ அலுவலர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.

கடந்த மூன்று நாள்களாக ஹாட் ஸ்பிரிங், கோக்ரா பகுதிகளில் நடைபெற்றுவந்த திரும்பப்பெறும் நடவடிக்கை இன்று(ஜூலை 8) நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 2 கி.மீ., தொலைவு சீனா தனது ராணுவத்தை பின்வாங்கியுள்ளதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கூடாரங்களை முழுவதுமாக நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மோதல் வெடித்த பகுதியிலிருந்து 1 முதல் 1.5 கிமீ தொலைவு வரை இரு நாட்டு ராணுவமும் தங்களின் படைகளை திரும்பப்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளனர். ராணுவத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், கல்வான் பள்ளத்தாக்கில் உயர் ரக பாதுகாப்பு வாகனங்களை சீனா திரும்பப்பெறாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - சீனா எல்லையில் 60 கம்பெனிகளின் ஐடிபிபி படையினர் குவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.