ETV Bharat / bharat

கொரோனா அச்சம்: கிராமங்களில் ஆய்வகங்கள், மருத்துவ வசதிகளை அதிகரிக்க கோரிக்கை

author img

By

Published : Mar 17, 2020, 10:29 AM IST

டெல்லி: கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அதிகப்படியான ஆய்வகங்கள், தனிமைப்படுத்தப்படும் மையம், தற்காலிக மருத்துவமனை படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை கிராமப்புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கொரோனா பெருந்தொற்று உலகமெங்கிலும் பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தீவிரம் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. அதனைக் குறைக்க நகரப் பகுதிகள் மட்டுமில்லாமல் கிராமப் புறங்களிலும் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரசாந்த் தாண்டான், சமூக செயற்பாட்டாளர் குஞ்சனா சிங் இருவரும் அளித்துள்ள மனுவானது, நாட்டின் மக்கள் தொகையை கணக்கில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பெருந்தொற்று இருப்பவர்களைத் தனிமைப்படுத்தும் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.

இதைப் போல வழக்குரைஞர் ஆஷிமா மண்ட்லா அளித்துள்ள மனுவில், இந்தியாவின் கிராமப்புறங்களையும் கணக்கில் கொண்டு, தற்காலிக மருத்துவமனை படுக்கைகள், அதனுடன் கூடிய பிற சிகிச்சை வசதிகள், வெப்ப திரையிடல் சோதனை, குறிப்பாக, இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்க நாடு முழுவதையும் மையப்படுத்திய நிர்வாகத்தையும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது.

விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய அனைத்து பொது இடங்களிலும் வெப்பத் திரையிடல் மூலம் சோதனை நடைபெற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதித்தவர்களுக்காகவும், பாதிக்காமல் தவிர்ப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியா அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகளவிலான தினக்கூலிகளைக் கொண்டுள்ளது. இவர்கள் தினமும் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, சுகாதார நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'ஆதாரங்களை சேகரிக்காமல் குப்பையை அகற்றக் கூடாது' - டெல்லி கலவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு

கொரோனா பெருந்தொற்று உலகமெங்கிலும் பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தீவிரம் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. அதனைக் குறைக்க நகரப் பகுதிகள் மட்டுமில்லாமல் கிராமப் புறங்களிலும் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரசாந்த் தாண்டான், சமூக செயற்பாட்டாளர் குஞ்சனா சிங் இருவரும் அளித்துள்ள மனுவானது, நாட்டின் மக்கள் தொகையை கணக்கில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பெருந்தொற்று இருப்பவர்களைத் தனிமைப்படுத்தும் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.

இதைப் போல வழக்குரைஞர் ஆஷிமா மண்ட்லா அளித்துள்ள மனுவில், இந்தியாவின் கிராமப்புறங்களையும் கணக்கில் கொண்டு, தற்காலிக மருத்துவமனை படுக்கைகள், அதனுடன் கூடிய பிற சிகிச்சை வசதிகள், வெப்ப திரையிடல் சோதனை, குறிப்பாக, இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்க நாடு முழுவதையும் மையப்படுத்திய நிர்வாகத்தையும் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது.

விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய அனைத்து பொது இடங்களிலும் வெப்பத் திரையிடல் மூலம் சோதனை நடைபெற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதித்தவர்களுக்காகவும், பாதிக்காமல் தவிர்ப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியா அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகளவிலான தினக்கூலிகளைக் கொண்டுள்ளது. இவர்கள் தினமும் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, சுகாதார நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'ஆதாரங்களை சேகரிக்காமல் குப்பையை அகற்றக் கூடாது' - டெல்லி கலவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.