ETV Bharat / bharat

கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரம் பாதிப்பு

author img

By

Published : Feb 22, 2020, 3:38 AM IST

கொரோனா காரணமாக சுற்றுப்பயணங்களை சீன அரசு தடை செய்ததால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது, பல நாடுகள் சீன சுற்றுலாப்பயணிகள் நுழைவதற்கு அனுமதி மறுத்து வருகின்றன.

corona
corona

சீனாவின் வுகான் மாகாணத்தில் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸ் (கோவிட் -19) சீனாவின் பிற பகுதிகளுக்கும் பரவுவதோடு மட்டுமல்லாமல், படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவுகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க, சீன அரசு இன்றுவரை 16 நகரங்களை சுற்றி வளைத்து மூடியுள்ளது. இந்த நகரங்களின் உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளது. அனைத்தும் கட்டாய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. சீனாவின் புத்தாண்டைக் கொண்டாடிய பின்னர் ஏழு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் நாட்டிலிருந்து திரும்புவதை கொரோனா கட்டுப்பாடுகள் தடுத்துள்ளன. இதன் விளைவாக, ஹெனன், ஹூபே, ஜெஜியாங், குவாங்டாங் போன்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெனன் மாகாணம் உலகின் மிகப்பெரிய ஐஃபோன் (ஆப்பிள்) தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. ஹூபேயின் மாநில தலைநகரான வுகான் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் மற்றும் பல ஐரோப்பிய வாகன நிறுவனங்களால் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் குழுமம் பெய்ஜிங்கில் உள்ள 3,500 தொழிலாளர்களை இரண்டு வாரங்களுக்கு தொழிற்சாலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ, அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா, பிரிட்டனின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்களும் சீனாவில் தங்களது கார் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தன

சீனாவில் பல்வேறு நாடுகளுக்கு கார்கள், மின்னணுவியல் மற்றும் தொழில் துறை உபகரணங்கள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளால் அமைக்கப்பட்டவை. இன்று, எந்த ஒரு பொருளும் ஒரு நாட்டில் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அதன் உதிரி பாகங்கள் வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. அவை ஒன்றாக பொருத்தப்பட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஒரு நாட்டில் ஸ்மார்ட் போன்களின் கேமராக்கள் தயாரிக்கப்பட்டால், காட்சி திரைகள் மற்றொரு நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இது சர்வதேச விநியோக சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.

தைவான், தென் கொரியா, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகியவை இந்த விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கங்கள். கொரோனா காரணமாக இந்த சங்கிலிகள் பாதிப்படைந்துள்ளன. இதன் விளைவாக, சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சீனாவிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இப்போது அவர்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையில் உள்ளனர். சீனாவிலிருந்து வயரிங் கவச இணைப்புகள் வழங்கப்படாததால் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தென் கொரியாவில் அதன் சில பிரிவுகளை மூட வேண்டியிருந்தது. பல ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து பொதுச்சந்தை, வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்லாமல் வருகையை குறைத்து வருகின்றனர்.

இது சில்லறை சந்தையை பாதிக்கிறது. கொரோனா காரணமாக சுற்றுப்பயணங்களை சீன அரசு தடை செய்ததால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. பல நாடுகள் சீன சுற்றுலாப்பயணிகள் நுழைவதற்கு அனுமதி மறுத்து வருகின்றன. இது வியட்நாம், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூருக்கான சுற்றுலா வருவாயைக் கணிசமாகக் குறைக்கும்.

கொரோனா தாக்குதலால் சிங்கப்பூர் 10 மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை இழக்கும். ஹாங்காங், மக்காவ் போன்ற வணிக மையங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயண சேவைகளின் பங்கு 11.2 விழுக்காடும், ஹாங்காங்கில் 9.4 விழுக்காடும் ஆகும்.

இந்தியா மற்றும் இந்தோனேஷியாவிற்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், சுற்றுலாவில் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளைப் போல அதிகமாக இருக்காது. மறுபுறம், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் சீனாவுக்கான பயணத்தை நிறுத்திவிட்டன அல்லது குறைத்துள்ளன.

ஜூலை 24ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட டோக்கியோவின் கோடை கால ஒலிம்பிக்கை சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து இடையூறு மோசமாக பாதிக்கும் என்று ஜப்பான் கவலை கொண்டுள்ளது. கார்கள், தொழில்துறை இயந்திரங்கள், உபகரணங்கள், மருந்து பொருட்கள், வீட்டு உபகரணங்கள், கணினிகள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மையமாக சீனா உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, அதன் கார் உற்பத்தி 2020 முதல் காலாண்டில் 15 விழுக்காடு குறையக்கூடும். கார் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் பாஷ், மேக்னா இன்டர்நேஷனல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் என்விடியா ஆகியவை அவற்றின் உற்பத்தியைக் குறைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே சோர்வடைந்துள்ள உலகிற்கு கொரோனா ஒரு சாட்டை அடியாக மாறிவருகிறது. இந்த வைரஸ் சீனாவுடன் சேர்ந்து உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இழக்க வைக்கக்கூடும். சீனாவுக்கு கனரக இயந்திரங்களை ஏற்றுமதி செய்யும் ஜெர்மனிக்கான ஆர்டர்களும் குறைய வாய்ப்புள்ளது.

பிரகாசமான வாய்ப்புகள்

சீனாவிலிருந்து பொருட்கள் வழங்கல் குறைக்கப்பட்டதன் காரணமாக, உலக நாடுகள் சில பொருட்களுக்கு இந்தியாவை நம்பியிருக்கக் கூடும். இது ஓரளவிற்கு தான் நிவாரணம். மண்பாண்டங்கள், வீட்டு உபகரணங்கள், நாகரீக வாழ்க்கை முறை பொருட்கள், ஆடை, சிறிய அளவிலான பொறியியல் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

ஏற்கனவே, மேற்கத்திய நிறுவனங்கள் இந்தியாவுடன் தொடர்பில் உள்ளன. கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக முகமூடிகளுக்கு பெரிய ஆர்டர்கள் வந்துள்ளன. ஆரம்பத்தில், அனைத்து முகமூடிகளும் ஏற்றுமதி செய்யப்பட்டால், தமது தேவைகளுக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று இந்தியா கவலைப்பட்டு ஏற்றுமதியை நிறுத்தியது.

இருப்பினும், தேவை அதிகமாக இருந்ததால் இந்திய உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியவில்லை. சீனா போன்ற உலகத்திற்கான ஒரு தொழிற்சாலையாக மாறுவதற்கு நீண்டகால திட்டத்துடன் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும்.

இன்று, சீனா உலகின் 10.4 விழுக்காடு பொருட்களை இறக்குமதி செய்கிறது. 2002 ல் இறக்குமதியில் சீனாவின் பங்கு வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே. அதனால்தான் கொரோனா வைரஸ் இழப்பு 2003 சார்ஸ் வைரஸால் ஏற்பட்டதை விட பல மடங்கு அதிகமாகும்.

2003 உடன் ஒப்பிடும்போது இன்று உலகப் பொருளாதாரத்திற்கு சீனா மிகவும் முக்கியமானது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் பங்கு 15 விழுக்காடாகும். இதற்கு எந்தவொரு குறைப்பும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது. 2018-19ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து இந்தியாவின் மொத்த இறக்குமதி 14 விழுக்காடாக இருந்தது.

இதே காலகட்டத்தில் சீனாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி ஐந்து விழுக்காடாக இருந்தது. கொரோனா பிரச்சினை தொடர்ந்தால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறையும்.

சீனாவில் உதிரி பாகங்கள் உற்பத்தி சீர்குலைந்து அங்குள்ள விநியோகிப்பாளர்கள் விலைகளை உயர்த்துவர். இது இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கும், உற்பத்தியைக் குறைத்து வேலைகள் குறைக்க வழிவகுக்கும்.

உலக நாடுகள் பொருளாதார ரீதியாக ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் ஒரு நேரத்தில், கொரோனா நெருக்கடியை பரஸ்பர ஒத்துழைப்புடன் மட்டுமே சமாளிக்க முடியும்.

இந்தியாவுக்கு தவிர்க்க முடியாத சிரமங்கள்

சீனாவிலிருந்து சில மூலப்பொருட்கள், உதிரி பாகங்களை இறக்குமதி செய்து சேமித்து வைத்திருக்கும் இந்தியா குறுகிய கால மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம். ஆனால் எதிர்காலத்தில் வரக்கூடிய தீமைகளைத் தவிர்க்க முடியாது. இந்தியா முக்கியமாக சீனாவிலிருந்து மின்னணு, பொறியியல் பொருட்கள் மற்றும் ரசாயனங்களை இறக்குமதி செய்கிறது.

சீர்குலைந்த இறக்குமதிகள் காரணமாக, 2020-21 ஆம் ஆண்டில் இந்திய நிறுவன வளர்ச்சி மந்தமாக இருக்கும். கொரோனா வைரஸ் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்திய நிறுவனங்கள் கடினமான காலங்களில் இருந்து தப்ப முடியாது.

அடுத்த நிதியாண்டில் இந்தியா 6.5 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கிறது. ஆறு மாதங்களுக்குள் கொரோனா கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளை அடைவது கடினம்.

சீனாவிலிருந்து உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் இடையூறு ஏற்படுவதால் மஹிந்திரா மற்றும் மாருதி கார்கள் உற்பத்தி மந்தமாகலாம். கொரோனா பயம் காரணமாக தற்போது சீனாவில் 60 விழுக்காடு ஆட்டோ அசெம்பிளி ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளிலிருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய நமக்கு சிறிது காலம் ஆகும்.

இந்தியா 10 முதல் 30 விழுக்காடு வாகன உபகரணங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு பேட்டரிகள் மற்றும் பிற உதிரி பாகங்களுக்கு சீனாவை நம்பியுள்ளோம்.

கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்திய ஆட்டோமொபைல் தொழில் எட்டு விழுக்காட்டிற்கும் மேலாக குறையக்கூடும் என்று சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஃபிட்ச்) எச்சரித்துள்ளது.

வைரங்கள், தோல் பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருக்கும். காலணிகளுக்கான அடிப்பாகங்கள் சீனாவிலிருந்து வர வேண்டும்.

சீனாவிலிருந்து சோலார் பேனல்கள் வழங்குவது மந்தமானால், சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா பின்தங்கியிருக்கும். ஏர் கண்டிஷனர்கள், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

உதிரி பாகங்கள் குறைவாக வழங்கப்படுவதால் இந்த பொருட்களின் விலைகள் உயரக்கூடும். சியோமி ஏற்கனவே தனது ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. மறுபுறம், மொத்த மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருள்(ஏபிஐ)களுக்கு தேவையான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து அவற்றின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மருந்துகளின் உற்பத்தி தடைபட்டு, விலை உயர்வு தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது. பாராசிட்டமால் போன்ற மூலப்பொருட்களின் விலை ஏற்கனவே பத்து நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. கொரோனா நெருக்கடியை இந்தியா ஒரு விழித்தெழுந்த அழைப்பாக கருதி, அதன் சொந்த மண்ணில் மொத்த மருந்துகள், மருந்து மூலப்பொருள்.(ஏபிஐ) மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான பரந்த உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸ் (கோவிட் -19) சீனாவின் பிற பகுதிகளுக்கும் பரவுவதோடு மட்டுமல்லாமல், படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவுகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க, சீன அரசு இன்றுவரை 16 நகரங்களை சுற்றி வளைத்து மூடியுள்ளது. இந்த நகரங்களின் உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளது. அனைத்தும் கட்டாய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. சீனாவின் புத்தாண்டைக் கொண்டாடிய பின்னர் ஏழு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் நாட்டிலிருந்து திரும்புவதை கொரோனா கட்டுப்பாடுகள் தடுத்துள்ளன. இதன் விளைவாக, ஹெனன், ஹூபே, ஜெஜியாங், குவாங்டாங் போன்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெனன் மாகாணம் உலகின் மிகப்பெரிய ஐஃபோன் (ஆப்பிள்) தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. ஹூபேயின் மாநில தலைநகரான வுகான் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் மற்றும் பல ஐரோப்பிய வாகன நிறுவனங்களால் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் குழுமம் பெய்ஜிங்கில் உள்ள 3,500 தொழிலாளர்களை இரண்டு வாரங்களுக்கு தொழிற்சாலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ, அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா, பிரிட்டனின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்களும் சீனாவில் தங்களது கார் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தன

சீனாவில் பல்வேறு நாடுகளுக்கு கார்கள், மின்னணுவியல் மற்றும் தொழில் துறை உபகரணங்கள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளால் அமைக்கப்பட்டவை. இன்று, எந்த ஒரு பொருளும் ஒரு நாட்டில் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அதன் உதிரி பாகங்கள் வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. அவை ஒன்றாக பொருத்தப்பட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஒரு நாட்டில் ஸ்மார்ட் போன்களின் கேமராக்கள் தயாரிக்கப்பட்டால், காட்சி திரைகள் மற்றொரு நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இது சர்வதேச விநியோக சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.

தைவான், தென் கொரியா, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகியவை இந்த விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கங்கள். கொரோனா காரணமாக இந்த சங்கிலிகள் பாதிப்படைந்துள்ளன. இதன் விளைவாக, சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சீனாவிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இப்போது அவர்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையில் உள்ளனர். சீனாவிலிருந்து வயரிங் கவச இணைப்புகள் வழங்கப்படாததால் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தென் கொரியாவில் அதன் சில பிரிவுகளை மூட வேண்டியிருந்தது. பல ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து பொதுச்சந்தை, வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்லாமல் வருகையை குறைத்து வருகின்றனர்.

இது சில்லறை சந்தையை பாதிக்கிறது. கொரோனா காரணமாக சுற்றுப்பயணங்களை சீன அரசு தடை செய்ததால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. பல நாடுகள் சீன சுற்றுலாப்பயணிகள் நுழைவதற்கு அனுமதி மறுத்து வருகின்றன. இது வியட்நாம், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூருக்கான சுற்றுலா வருவாயைக் கணிசமாகக் குறைக்கும்.

கொரோனா தாக்குதலால் சிங்கப்பூர் 10 மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை இழக்கும். ஹாங்காங், மக்காவ் போன்ற வணிக மையங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயண சேவைகளின் பங்கு 11.2 விழுக்காடும், ஹாங்காங்கில் 9.4 விழுக்காடும் ஆகும்.

இந்தியா மற்றும் இந்தோனேஷியாவிற்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், சுற்றுலாவில் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளைப் போல அதிகமாக இருக்காது. மறுபுறம், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் சீனாவுக்கான பயணத்தை நிறுத்திவிட்டன அல்லது குறைத்துள்ளன.

ஜூலை 24ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட டோக்கியோவின் கோடை கால ஒலிம்பிக்கை சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து இடையூறு மோசமாக பாதிக்கும் என்று ஜப்பான் கவலை கொண்டுள்ளது. கார்கள், தொழில்துறை இயந்திரங்கள், உபகரணங்கள், மருந்து பொருட்கள், வீட்டு உபகரணங்கள், கணினிகள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மையமாக சீனா உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, அதன் கார் உற்பத்தி 2020 முதல் காலாண்டில் 15 விழுக்காடு குறையக்கூடும். கார் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் பாஷ், மேக்னா இன்டர்நேஷனல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் என்விடியா ஆகியவை அவற்றின் உற்பத்தியைக் குறைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே சோர்வடைந்துள்ள உலகிற்கு கொரோனா ஒரு சாட்டை அடியாக மாறிவருகிறது. இந்த வைரஸ் சீனாவுடன் சேர்ந்து உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இழக்க வைக்கக்கூடும். சீனாவுக்கு கனரக இயந்திரங்களை ஏற்றுமதி செய்யும் ஜெர்மனிக்கான ஆர்டர்களும் குறைய வாய்ப்புள்ளது.

பிரகாசமான வாய்ப்புகள்

சீனாவிலிருந்து பொருட்கள் வழங்கல் குறைக்கப்பட்டதன் காரணமாக, உலக நாடுகள் சில பொருட்களுக்கு இந்தியாவை நம்பியிருக்கக் கூடும். இது ஓரளவிற்கு தான் நிவாரணம். மண்பாண்டங்கள், வீட்டு உபகரணங்கள், நாகரீக வாழ்க்கை முறை பொருட்கள், ஆடை, சிறிய அளவிலான பொறியியல் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

ஏற்கனவே, மேற்கத்திய நிறுவனங்கள் இந்தியாவுடன் தொடர்பில் உள்ளன. கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக முகமூடிகளுக்கு பெரிய ஆர்டர்கள் வந்துள்ளன. ஆரம்பத்தில், அனைத்து முகமூடிகளும் ஏற்றுமதி செய்யப்பட்டால், தமது தேவைகளுக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று இந்தியா கவலைப்பட்டு ஏற்றுமதியை நிறுத்தியது.

இருப்பினும், தேவை அதிகமாக இருந்ததால் இந்திய உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியவில்லை. சீனா போன்ற உலகத்திற்கான ஒரு தொழிற்சாலையாக மாறுவதற்கு நீண்டகால திட்டத்துடன் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும்.

இன்று, சீனா உலகின் 10.4 விழுக்காடு பொருட்களை இறக்குமதி செய்கிறது. 2002 ல் இறக்குமதியில் சீனாவின் பங்கு வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே. அதனால்தான் கொரோனா வைரஸ் இழப்பு 2003 சார்ஸ் வைரஸால் ஏற்பட்டதை விட பல மடங்கு அதிகமாகும்.

2003 உடன் ஒப்பிடும்போது இன்று உலகப் பொருளாதாரத்திற்கு சீனா மிகவும் முக்கியமானது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் பங்கு 15 விழுக்காடாகும். இதற்கு எந்தவொரு குறைப்பும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது. 2018-19ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து இந்தியாவின் மொத்த இறக்குமதி 14 விழுக்காடாக இருந்தது.

இதே காலகட்டத்தில் சீனாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி ஐந்து விழுக்காடாக இருந்தது. கொரோனா பிரச்சினை தொடர்ந்தால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறையும்.

சீனாவில் உதிரி பாகங்கள் உற்பத்தி சீர்குலைந்து அங்குள்ள விநியோகிப்பாளர்கள் விலைகளை உயர்த்துவர். இது இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கும், உற்பத்தியைக் குறைத்து வேலைகள் குறைக்க வழிவகுக்கும்.

உலக நாடுகள் பொருளாதார ரீதியாக ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் ஒரு நேரத்தில், கொரோனா நெருக்கடியை பரஸ்பர ஒத்துழைப்புடன் மட்டுமே சமாளிக்க முடியும்.

இந்தியாவுக்கு தவிர்க்க முடியாத சிரமங்கள்

சீனாவிலிருந்து சில மூலப்பொருட்கள், உதிரி பாகங்களை இறக்குமதி செய்து சேமித்து வைத்திருக்கும் இந்தியா குறுகிய கால மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம். ஆனால் எதிர்காலத்தில் வரக்கூடிய தீமைகளைத் தவிர்க்க முடியாது. இந்தியா முக்கியமாக சீனாவிலிருந்து மின்னணு, பொறியியல் பொருட்கள் மற்றும் ரசாயனங்களை இறக்குமதி செய்கிறது.

சீர்குலைந்த இறக்குமதிகள் காரணமாக, 2020-21 ஆம் ஆண்டில் இந்திய நிறுவன வளர்ச்சி மந்தமாக இருக்கும். கொரோனா வைரஸ் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்திய நிறுவனங்கள் கடினமான காலங்களில் இருந்து தப்ப முடியாது.

அடுத்த நிதியாண்டில் இந்தியா 6.5 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கிறது. ஆறு மாதங்களுக்குள் கொரோனா கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளை அடைவது கடினம்.

சீனாவிலிருந்து உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் இடையூறு ஏற்படுவதால் மஹிந்திரா மற்றும் மாருதி கார்கள் உற்பத்தி மந்தமாகலாம். கொரோனா பயம் காரணமாக தற்போது சீனாவில் 60 விழுக்காடு ஆட்டோ அசெம்பிளி ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளிலிருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய நமக்கு சிறிது காலம் ஆகும்.

இந்தியா 10 முதல் 30 விழுக்காடு வாகன உபகரணங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு பேட்டரிகள் மற்றும் பிற உதிரி பாகங்களுக்கு சீனாவை நம்பியுள்ளோம்.

கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்திய ஆட்டோமொபைல் தொழில் எட்டு விழுக்காட்டிற்கும் மேலாக குறையக்கூடும் என்று சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஃபிட்ச்) எச்சரித்துள்ளது.

வைரங்கள், தோல் பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருக்கும். காலணிகளுக்கான அடிப்பாகங்கள் சீனாவிலிருந்து வர வேண்டும்.

சீனாவிலிருந்து சோலார் பேனல்கள் வழங்குவது மந்தமானால், சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா பின்தங்கியிருக்கும். ஏர் கண்டிஷனர்கள், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

உதிரி பாகங்கள் குறைவாக வழங்கப்படுவதால் இந்த பொருட்களின் விலைகள் உயரக்கூடும். சியோமி ஏற்கனவே தனது ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. மறுபுறம், மொத்த மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருள்(ஏபிஐ)களுக்கு தேவையான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து அவற்றின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மருந்துகளின் உற்பத்தி தடைபட்டு, விலை உயர்வு தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது. பாராசிட்டமால் போன்ற மூலப்பொருட்களின் விலை ஏற்கனவே பத்து நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. கொரோனா நெருக்கடியை இந்தியா ஒரு விழித்தெழுந்த அழைப்பாக கருதி, அதன் சொந்த மண்ணில் மொத்த மருந்துகள், மருந்து மூலப்பொருள்.(ஏபிஐ) மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான பரந்த உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.