ETV Bharat / bharat

'மடி தந்து மனிதம் காத்த நண்பன்' - உதிர்ந்த நட்பின் உண்மை சம்பவம்

மனிதம் வாழும் நட்பையும், மதம் தாண்டிய நல்லிணக்கத்தையும் சாகடித்துவிட முடியாது என்பதற்கு இலக்கணமாக இந்த கரோனா காலத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பு..

author img

By

Published : May 20, 2020, 9:04 PM IST

Updated : May 21, 2020, 1:42 AM IST

உதிர்ந்த நட்பின் உண்மை சம்பவம்
உதிர்ந்த நட்பின் உண்மை சம்பவம்

குஜராத்தின் சூரத் நகரில் ஒரே அறையில் தங்கி நண்பர்கள் இருவர் கூலி வேலை செய்து வந்தனர். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாதியற்று போன இருவரும் கால் வயிற்றுச் சோற்றுக்கே கண்ணீர் வடித்துள்ளனர். பிழைப்பு தேடி சென்றவர்களையெல்லாம் பீதியடைய வைத்த கரோனாவால் நண்பர்கள் இருவரும் மீண்டும் உத்திரப் பிரதேசம் மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்து, பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு அவ்வழியாக சென்ற லாரியில் ஏறி இருவரும் புறப்பட்டனர்.

அந்த லாரியில் இப்படி பிழைப்பு தேடிச் சென்ற வேறு சிலரும் இருந்தார்கள். இந்நிலையில் ஒரு நண்பனுக்குத் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு, அதிகரித்துக்கொண்டே போனது. இதனால், லாரியில் இருந்தவர்கள் அவனை மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் கொலாரா நகர நெடுஞ்சாலையில் இறங்கிவிடக் கட்டாயப்படுத்தினர். அவன் இறங்கியபோது, கூடவே அவனுடைய நண்பனும் இறங்கிவிட்டான்.

'மதம் தாண்டி மடி தந்து மனிதம் காத்த நண்பன்' - சிறப்பு தொகுப்பு

ஆம்புலன்ஸ் வருகிற வரையில் நண்பனின் தலையைத் தனது மடியில் வைத்துக்கொண்டு, உதவிக்காக துடித்து கொண்டிருந்தான். பின்னர் ஷிவ்புரி மருத்துவமனையில் நண்பனை சேர்த்து விட்டு பெருமூச்சு விட்டவனுக்கு 'அவன் இறந்தான்' என்ற செய்தி செவிகளுக்குள் நுழைந்து கிறுகிறுக்க வைத்தது. அவனது இறப்பால் தனிமைப்பட்ட நண்பன், தற்போது கரோனா தனிமைப் பிரிவு கண்காணிப்பில் இருக்கிறான். இதனையடுத்து இருவரது உடல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

"சுமார் 850 கி.மீ. திறந்த லாரியில், அதுவும் கடும் வெயிலில் பயணம் செய்ததால் உடலில் ஏற்பட்ட வெப்பத்தாக்குதல், நீரிழப்பு தான் இந்த மரணத்திற்கு காரணம்" என்கிறார் சிகிச்சையளித்த தலைமை மருத்துவர். “அவன் என் நண்பன், அந்த நிலைமையில் அவனை எப்படி விட்டுவிட்டுப் போக முடியும்? லாரியில் வந்தவர்கள் அவனுக்குக் கரோனா ஏற்பட்டிருப்பதாக பயந்தார்கள். மருத்துவ உதவி கேட்பதற்குக் கூட மறுத்துவிட்டார்கள்”, என்கிறான் நண்பன்.

நண்பனின் உயிர்காக்க  பரபரப்பாய் துடித்து போன நண்பன்
நண்பனின் உயிர்காக்க பரபரப்பாய் துடித்து போன நண்பன்

தற்போது நண்பனின் இறப்பிற்கு முன்பு அவனை மடியில் படுக்க வைத்து உதவி கேட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிர் நண்பனுக்கு மடியை விரித்தவனின் பெயர் யாகூப் முஹமது. உயிருக்காக மடியில் துடித்தவனின் பெயர் அம்ரித் ராமச்சந்திரன். மனிதம் வாழும் நட்பையும், மதம் தாண்டிய நல்லிணக்கத்தையும் சாகடித்துவிட முடியுமா?

இதையும் படிங்க:

இது காதலுமல்ல, நட்புமல்ல... எல்லையற்ற பேரன்பு

குஜராத்தின் சூரத் நகரில் ஒரே அறையில் தங்கி நண்பர்கள் இருவர் கூலி வேலை செய்து வந்தனர். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாதியற்று போன இருவரும் கால் வயிற்றுச் சோற்றுக்கே கண்ணீர் வடித்துள்ளனர். பிழைப்பு தேடி சென்றவர்களையெல்லாம் பீதியடைய வைத்த கரோனாவால் நண்பர்கள் இருவரும் மீண்டும் உத்திரப் பிரதேசம் மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்து, பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு அவ்வழியாக சென்ற லாரியில் ஏறி இருவரும் புறப்பட்டனர்.

அந்த லாரியில் இப்படி பிழைப்பு தேடிச் சென்ற வேறு சிலரும் இருந்தார்கள். இந்நிலையில் ஒரு நண்பனுக்குத் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு, அதிகரித்துக்கொண்டே போனது. இதனால், லாரியில் இருந்தவர்கள் அவனை மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் கொலாரா நகர நெடுஞ்சாலையில் இறங்கிவிடக் கட்டாயப்படுத்தினர். அவன் இறங்கியபோது, கூடவே அவனுடைய நண்பனும் இறங்கிவிட்டான்.

'மதம் தாண்டி மடி தந்து மனிதம் காத்த நண்பன்' - சிறப்பு தொகுப்பு

ஆம்புலன்ஸ் வருகிற வரையில் நண்பனின் தலையைத் தனது மடியில் வைத்துக்கொண்டு, உதவிக்காக துடித்து கொண்டிருந்தான். பின்னர் ஷிவ்புரி மருத்துவமனையில் நண்பனை சேர்த்து விட்டு பெருமூச்சு விட்டவனுக்கு 'அவன் இறந்தான்' என்ற செய்தி செவிகளுக்குள் நுழைந்து கிறுகிறுக்க வைத்தது. அவனது இறப்பால் தனிமைப்பட்ட நண்பன், தற்போது கரோனா தனிமைப் பிரிவு கண்காணிப்பில் இருக்கிறான். இதனையடுத்து இருவரது உடல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

"சுமார் 850 கி.மீ. திறந்த லாரியில், அதுவும் கடும் வெயிலில் பயணம் செய்ததால் உடலில் ஏற்பட்ட வெப்பத்தாக்குதல், நீரிழப்பு தான் இந்த மரணத்திற்கு காரணம்" என்கிறார் சிகிச்சையளித்த தலைமை மருத்துவர். “அவன் என் நண்பன், அந்த நிலைமையில் அவனை எப்படி விட்டுவிட்டுப் போக முடியும்? லாரியில் வந்தவர்கள் அவனுக்குக் கரோனா ஏற்பட்டிருப்பதாக பயந்தார்கள். மருத்துவ உதவி கேட்பதற்குக் கூட மறுத்துவிட்டார்கள்”, என்கிறான் நண்பன்.

நண்பனின் உயிர்காக்க  பரபரப்பாய் துடித்து போன நண்பன்
நண்பனின் உயிர்காக்க பரபரப்பாய் துடித்து போன நண்பன்

தற்போது நண்பனின் இறப்பிற்கு முன்பு அவனை மடியில் படுக்க வைத்து உதவி கேட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிர் நண்பனுக்கு மடியை விரித்தவனின் பெயர் யாகூப் முஹமது. உயிருக்காக மடியில் துடித்தவனின் பெயர் அம்ரித் ராமச்சந்திரன். மனிதம் வாழும் நட்பையும், மதம் தாண்டிய நல்லிணக்கத்தையும் சாகடித்துவிட முடியுமா?

இதையும் படிங்க:

இது காதலுமல்ல, நட்புமல்ல... எல்லையற்ற பேரன்பு

Last Updated : May 21, 2020, 1:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.