புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே 9) நடைபெற்றது.
அப்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது, “புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று பேராக உயர்ந்துள்ளது. ஏற்கனவே எட்டு பேர் குணமடைந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் என மொத்தம் எட்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.