ETV Bharat / bharat

காரைக்காலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் - காவலர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்! - காவலர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்

புதுச்சேரி: காரைக்காலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

clash-between-two-parties-in-karaika
clash-between-two-parties-in-karaika
author img

By

Published : Feb 11, 2020, 5:14 PM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், விழுதியூர் பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு தரப்பு மக்களுக்கு இலவச பட்டா வழங்குவதற்கான வேலைகளை மாவட்ட நிர்வாகம், திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தனும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுதியூர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விரைந்து இலவச பட்டா வழங்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மனு அளிக்க சென்ற தெற்குபேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, எதிர் தரப்பினர் தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நடந்துவந்த பிரச்னை நேற்று கலவரமாக மாறியது. இதில் ஒரு தரப்பு மக்கள் வசிக்கும் கட்டிகோவில்தெருவில் புகுந்த 50க்கும் மேற்பட்ட கும்பல், கல், கட்டையைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருநள்ளாறு மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் வீரவல்லபன் தலைமையிலான காவல்துறையினர் வருகை தந்தனர். ஆனால், அங்கு காவல்துறையின் கண்முன்னே கல் வீச்சு சம்பவங்கள் கடுமையாக நடைபெற்றன. அப்போது எடுக்கப்பட்ட காணொலிக்காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்

மேலும் இக்கலவரத்தில் மூன்று காவலர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர் இரு பிரிவிலும், கலவரத்துக்குக் காரணமான 20க்கும் மேற்பட்டோரை திருப்பட்டினம் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை கண்முன்னே நடந்த இருசமூகத்திற்கான கலவரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், விழுதியூர் பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு தரப்பு மக்களுக்கு இலவச பட்டா வழங்குவதற்கான வேலைகளை மாவட்ட நிர்வாகம், திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தனும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுதியூர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விரைந்து இலவச பட்டா வழங்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மனு அளிக்க சென்ற தெற்குபேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, எதிர் தரப்பினர் தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நடந்துவந்த பிரச்னை நேற்று கலவரமாக மாறியது. இதில் ஒரு தரப்பு மக்கள் வசிக்கும் கட்டிகோவில்தெருவில் புகுந்த 50க்கும் மேற்பட்ட கும்பல், கல், கட்டையைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருநள்ளாறு மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் வீரவல்லபன் தலைமையிலான காவல்துறையினர் வருகை தந்தனர். ஆனால், அங்கு காவல்துறையின் கண்முன்னே கல் வீச்சு சம்பவங்கள் கடுமையாக நடைபெற்றன. அப்போது எடுக்கப்பட்ட காணொலிக்காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்

மேலும் இக்கலவரத்தில் மூன்று காவலர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர் இரு பிரிவிலும், கலவரத்துக்குக் காரணமான 20க்கும் மேற்பட்டோரை திருப்பட்டினம் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை கண்முன்னே நடந்த இருசமூகத்திற்கான கலவரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை

Intro:காரைக்காலில் இரு பிரிவினருக்கு இடையே இருந்துவந்த இடப்பிரச்சனை கலவரமாக மாறியது ; கற்கள், கட்டைகள் கொண்டு மோதல் ; 3 போலீசார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் ; 20 பேர் கைது.Body:காரைக்காலில் இரு பிரிவினருக்கு இடையே இருந்துவந்த இடப்பிரச்சனை கலவரமாக மாறியது ; கற்கள், கட்டைகள் கொண்டு மோதல் ; 3 போலீசார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் ; 20 பேர் கைது.


புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் விழுதியூர் பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் தலித் மக்களுக்கு இலவச பட்டா வழங்குவதற்கான வேலைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுதியூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விரைந்து இலவச பட்டா வழங்கவேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனு அளிக்க சென்ற தெற்குபேட் பகுதியை சேர்ந்த ஒருவரை எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இரு பிரிவினருக்கும் இடையே நடந்துவந்த பிரச்சனை நேற்று கலவரமாக மாறி, தலித் மக்கள் வசிக்கும் கட்டிகோவில்தெரு உள்ளே புகுந்த 50க்கும் மேற்பட்ட கும்பல், கல் மற்றும் கட்டையை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநள்ளாறு எஸ்பி வீரவள்ளபன் தலைமையில் போலீசார் வந்தனர். ஆனால், போலீசாரின் கண்முன்னே கல் வீச்சு சம்பவங்கள் நடைபெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தில் 3 காவலர் உட்பட 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதுடன், ஒரு காவலருக்கு கை தேய்மானம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு பிரிவிலும், கலவரத்துக்கு காரணமான 20க்கும் மேற்பட்டோரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்கால் அருகே போலீசாரின் கண்முன்னே கலவரம் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.