ETV Bharat / bharat

அகமதாபாத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் வந்த டெல்லி மக்கள்!

author img

By

Published : May 16, 2020, 3:06 PM IST

டெல்லி: ஊரடங்கின் காரணமாக அகமதாபாத்தில் சிக்கித் தவித்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு வந்தடைந்தனர்.

அகமதாபாத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் வந்த டெல்லி மக்கள்
அகமதாபாத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் வந்த டெல்லி மக்கள்

கரோனா தொற்றின் காரணமாக அகமதாபாத்தில் சிக்கித் தவித்த மக்களுக்காக டெல்லி செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலின் மூலம் சொந்த ஊருக்கு வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், மக்களுக்காக ரயில் சேவையை தொடங்கியதற்காக அரசுக்கும், அலுவலர்களுக்கும் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து விஜயலட்சுமி என்ற பயணி கூறுகையில், “ரயில் சேவை தொடங்கியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஊரடங்கின் காரணமாக நான் அகமதாபாத்தில் சிக்கிக்கொண்டேன்.

எனது குழந்தைகள் எனக்காக வெளியே காத்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களைச் சந்திப்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ரயில் நிலையம் நோக்கி நடந்த வடமாநில தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய போலீஸார்

கரோனா தொற்றின் காரணமாக அகமதாபாத்தில் சிக்கித் தவித்த மக்களுக்காக டெல்லி செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலின் மூலம் சொந்த ஊருக்கு வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், மக்களுக்காக ரயில் சேவையை தொடங்கியதற்காக அரசுக்கும், அலுவலர்களுக்கும் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து விஜயலட்சுமி என்ற பயணி கூறுகையில், “ரயில் சேவை தொடங்கியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஊரடங்கின் காரணமாக நான் அகமதாபாத்தில் சிக்கிக்கொண்டேன்.

எனது குழந்தைகள் எனக்காக வெளியே காத்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களைச் சந்திப்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ரயில் நிலையம் நோக்கி நடந்த வடமாநில தொழிலாளர்கள் - திருப்பி அனுப்பிய போலீஸார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.