ETV Bharat / bharat

உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்

author img

By

Published : Aug 1, 2020, 8:52 PM IST

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வென்டிலேட்டர்
வென்டிலேட்டர்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்த நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்தை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் 2.15 ஆக உள்ளது.

ஜூலை 31ஆம் தேதியின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 0.22 விழுக்காட்டினர் மட்டுமே வென்டிலேட்டர்களை பயன்படுத்திவருகின்றனர். உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் அதை விற்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. வென்டிலேட்டர்களை தயாரிப்பது நாட்டில் அதிகரித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களின் முடிவு குறித்து வெளிநாட்டு வணிகத்திற்கான பொது இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு மார்ச் மாதம் தடை விதித்தது.

இதையும் படிங்க: கல்வி அமைப்பை உலக தரத்தில் நவீனமயமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - மோடி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்த நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்தை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் 2.15 ஆக உள்ளது.

ஜூலை 31ஆம் தேதியின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 0.22 விழுக்காட்டினர் மட்டுமே வென்டிலேட்டர்களை பயன்படுத்திவருகின்றனர். உள்நாட்டு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் அதை விற்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. வென்டிலேட்டர்களை தயாரிப்பது நாட்டில் அதிகரித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களின் முடிவு குறித்து வெளிநாட்டு வணிகத்திற்கான பொது இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு மார்ச் மாதம் தடை விதித்தது.

இதையும் படிங்க: கல்வி அமைப்பை உலக தரத்தில் நவீனமயமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.