ETV Bharat / bharat

காணொலி வாயிலாக இன்று கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு!

author img

By

Published : Oct 27, 2020, 12:40 PM IST

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை மறுநாள் (அக்டோபர் 29) நடைபெறவுள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று (அக்டோபர் 27) கூடுகிறது.

Cauvery Disciplinary Committee meeting
காணொலி வாயிலாக இன்று கூடும் காவிரி ஒழுங்காற்றுக் குழு

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று கூடுகிறது. இதில், நீர்ப்புள்ளி விவரங்கள், அணை பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இன்று எடுக்கப்படும் முடிவுகள் நாளை மறுநாள் ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா அரசு செயல்படுவது குறித்து விவாதிக்கவுள்ளது. மேலும், கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடாக அரசு கருத்து தெரிவித்தால், அதற்கு தமிழ்நாட்டு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளனர்.

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று கூடுகிறது. இதில், நீர்ப்புள்ளி விவரங்கள், அணை பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இன்று எடுக்கப்படும் முடிவுகள் நாளை மறுநாள் ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா அரசு செயல்படுவது குறித்து விவாதிக்கவுள்ளது. மேலும், கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடாக அரசு கருத்து தெரிவித்தால், அதற்கு தமிழ்நாட்டு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளனர்.

இதையும் படிங்க: காவிரி காப்பாளர்’ பட்டம் சூட்டிக்கொண்டு கொள்முதல் நிலையங்களை கண்டுகொள்ளாத முதலமைச்சர் - ஸ்டாலின் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.