ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வினோத் சிங் என்பவர் காவலராகப் பணியாற்றிவருகிறார். 45 வயதான இவர் 160 கிலோ எடையுடன் இருந்த நிலையில், அவர் பணியிலிருந்தபோது கடந்த ஜூலை 17ஆம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் குறித்து எல்லை பாதுகாப்புத் துறை விசாரணை மேற்கொண்ட போதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று தெரிவந்துள்ளது. அதிக உடல் பருமன் கொண்ட வினோத் சிங் அண்மையில் உடல் பரிசோதனை மேற்கொண்டார். பாதுகாப்புப் படையில் பணியாற்ற ஆரோக்கியமான உடல்தகுதி தேவைப்படும் நிலையில், 160 கிலோ எடையுடன் 52.8 பி.எம்.ஐ (B.M.I.) கொண்ட இவருக்கு உடல் தகுதி உள்ளதாக மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார்.
விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து அந்த மருத்துவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் எஸ்.எஸ் தேஸ்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும், மற்ற வீரர்களின் உடற்தகுதி குறித்து மூத்த அலுவலர்களும் மருத்துவ குழுவினரும் தீவிர கண்கானிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை 4 ஆயிரத்து 660 பி.எஸ்.எஃப் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 887 வீரர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: மீளும் பாதையில் இந்தியா : மெல்ல குறையும் வேலையின்மை விழுக்காடு - சி.எம்.ஐ.இ