ETV Bharat / bharat

அபாய கட்டத்தை நெருங்கும் காற்று மாசு: டெல்லி அரசு எடுத்துள்ள அதிரடி திட்டம்!

author img

By

Published : Oct 27, 2020, 2:41 PM IST

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மிக மோசம் என்ற நிலையிலேயே உள்ளதால், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

Air quality in Delhi
Air quality in Delhi

டெல்லியில் குளிர்காலம் தொடங்கினாலேயே காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை, தூசி ஆகியவற்றுடன் வேளாண் கழிவுகளை எரிப்பதால் வரும் புகையும் இணைந்துகொள்வதால் டெல்லியில் காற்று மாசு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், டெல்லியுள்ள ரோஹினி என்ற பகுதியில் காற்று தர மதிப்பீடு 346ஆகவும், ஆர்.கே. புரத்தில் 329ஆகவும், ஆனந்த் விஹாரில் 377ஆகவும் முண்ட்காவில் 363ஆகவும் பதிவாகியுள்ளது.

அபாய கட்டத்தை நெருங்கியுள்ள காற்று மாசு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'Red Light On, Gaadi Off' என்ற பரப்புரையை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

காற்றின் தரம் 0 முதல் 50-க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100 வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.

அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 'கரோனா கோ, கரோனா கோ...' முழக்கமிட்ட மத்திய அமைச்சருக்கு கரோனா உறுதி!

டெல்லியில் குளிர்காலம் தொடங்கினாலேயே காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை, தூசி ஆகியவற்றுடன் வேளாண் கழிவுகளை எரிப்பதால் வரும் புகையும் இணைந்துகொள்வதால் டெல்லியில் காற்று மாசு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், டெல்லியுள்ள ரோஹினி என்ற பகுதியில் காற்று தர மதிப்பீடு 346ஆகவும், ஆர்.கே. புரத்தில் 329ஆகவும், ஆனந்த் விஹாரில் 377ஆகவும் முண்ட்காவில் 363ஆகவும் பதிவாகியுள்ளது.

அபாய கட்டத்தை நெருங்கியுள்ள காற்று மாசு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'Red Light On, Gaadi Off' என்ற பரப்புரையை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

காற்றின் தரம் 0 முதல் 50-க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100 வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.

அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 'கரோனா கோ, கரோனா கோ...' முழக்கமிட்ட மத்திய அமைச்சருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.