ETV Bharat / bharat

ஏர் இந்தியா ஊழல்: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் - EC summons P Chidambaram in air india scam case

டெல்லி: ஏர் இந்தியா விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Chidambaram
author img

By

Published : Aug 19, 2019, 7:56 PM IST

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 43 பயணிகள் விமானம் கொள்முதலுக்கு ஏர் இந்தியா - ஏர் பஸ் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, இதனை விசாரிக்க அமலாக்கத்துறை களமிறங்கியது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 23ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் கைது செய்யப்படுவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 43 பயணிகள் விமானம் கொள்முதலுக்கு ஏர் இந்தியா - ஏர் பஸ் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, இதனை விசாரிக்க அமலாக்கத்துறை களமிறங்கியது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 23ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் கைது செய்யப்படுவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

Intro:Body:

Delhi CBI sent summon to P Chidambaram 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.