ETV Bharat / bharat

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? - பொதுச்செயலாளர் தாரிக் ஈ டி.வி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி!

author img

By

Published : Sep 24, 2020, 8:32 PM IST

டெல்லி : அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அடுத்த ஆறுமாத காலத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படுவாரென அதன் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் ? - பொதுச்செயலாளர் தாரிக் ஈ டி.வி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி !
காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் ? - பொதுச்செயலாளர் தாரிக் ஈ டி.வி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி !

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி மீண்டும் தலைவராக இருக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் முழுநேரத் தலைமை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.

அந்த கடிதத்தில், குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேர் கையெழுத்திட்டு இருந்தனர்.

அந்த அதிருப்தி கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பலரும் தற்போது மறுசீரமைப்பில் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இருந்து நீக்கப்பட்டு, தாரிக் அன்வர் நியமனம் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தாரிக் அன்வர் காங்கிரஸ் கட்சியின் அரசியல் திட்டங்கள் குறித்து ஈடிவி பாரத்துடன் மனந்திறந்து பேசியுள்ளார்.

அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னை குறித்து கமிட்டி தீவிரமாக பார்வையை செலுத்தி வருகிறது.

இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் புதிய ஏ.ஐ.சி.சி தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ.சி.சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

கமிட்டி சீரமைப்பு தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்கள், கமிட்டியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளியில் சொல்லப்படும் வதந்திகளுக்கும், மற்ற அனுமானங்களுக்கும் எங்களிடம் பதில் இல்லை.

காங்கிரஸ் கமிட்டியின் தலைமையை வழி நடத்த புதிதாக அமைக்கப்பட்ட தலைமை செயற்குழுவின் மூத்த ஆலோசகராக குலாம் நபி ஆசாத் இருக்கிறார். மேலும் சில தலைவர்களும் அதில் அடங்குவர்.

அடுத்த 6 மாதங்களுக்குள், ஒரு முழுநேர ஏ.ஐ.சி.சி தலைவர் கமிட்டியின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வார்.

இந்தியாவின் வேளாண் துறையை கார்ப்பரேட் வசமாக்கும் புதிய சட்ட முன்வடிவுகள் விவசாயிகளின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது.

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் திட்டமிட்டுள்ள தேசிய அளவிலான போராட்டங்கள் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கும்" என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி மீண்டும் தலைவராக இருக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் முழுநேரத் தலைமை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.

அந்த கடிதத்தில், குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேர் கையெழுத்திட்டு இருந்தனர்.

அந்த அதிருப்தி கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பலரும் தற்போது மறுசீரமைப்பில் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இருந்து நீக்கப்பட்டு, தாரிக் அன்வர் நியமனம் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தாரிக் அன்வர் காங்கிரஸ் கட்சியின் அரசியல் திட்டங்கள் குறித்து ஈடிவி பாரத்துடன் மனந்திறந்து பேசியுள்ளார்.

அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னை குறித்து கமிட்டி தீவிரமாக பார்வையை செலுத்தி வருகிறது.

இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் புதிய ஏ.ஐ.சி.சி தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ.சி.சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

கமிட்டி சீரமைப்பு தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்கள், கமிட்டியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளியில் சொல்லப்படும் வதந்திகளுக்கும், மற்ற அனுமானங்களுக்கும் எங்களிடம் பதில் இல்லை.

காங்கிரஸ் கமிட்டியின் தலைமையை வழி நடத்த புதிதாக அமைக்கப்பட்ட தலைமை செயற்குழுவின் மூத்த ஆலோசகராக குலாம் நபி ஆசாத் இருக்கிறார். மேலும் சில தலைவர்களும் அதில் அடங்குவர்.

அடுத்த 6 மாதங்களுக்குள், ஒரு முழுநேர ஏ.ஐ.சி.சி தலைவர் கமிட்டியின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வார்.

இந்தியாவின் வேளாண் துறையை கார்ப்பரேட் வசமாக்கும் புதிய சட்ட முன்வடிவுகள் விவசாயிகளின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது.

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் திட்டமிட்டுள்ள தேசிய அளவிலான போராட்டங்கள் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.