கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போன பொதுமக்கள் உணவுப் பொருள்களில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினர். அதாவது நாள்தோறும் புதிது புதிதாக உணவினைச் செய்து சாப்பிடுவது, அதனை இணையதளத்தில் பகிர்வது என எப்போதும் பரபரப்பாகவே இயங்கிவருகின்றனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக பணம் செலவழித்து உணவு மற்றும் மளிகைப் பொருள்களை பொதுமக்கள் வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அதிலும் 72 விழுக்காட்டினர் உணவு, தின்பண்டங்களை வழக்கத்துக்கு மாறாக அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'லாக்டவுன் கரோனாவை தடுக்காமல் நாட்டின் வளர்ச்சியைத்தான் தடுத்துநிறுத்தியுள்ளது'