ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் பகுதியைச் சேர்ந்த ரத்தன் லால் என்பவர் டெல்லியில் தலைமைக் காவலராக பணியாற்றிவந்தார். அவர், கடந்த 24-ஆம் தேதி டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடித்த வன்முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்தனர். முன்னதாக இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ரத்தன் லால் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை