ETV Bharat / bharat

வேன் மீது லாரி மோதியதில் 5 பேர் பலி

author img

By

Published : Sep 26, 2020, 1:59 PM IST

உஜ்ஜைன்: தொழிலாளர்கள் பயணித்த வேன் மீது லாரி மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இன்று (செப்டம்பர் 26) அதிகாலை நர்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் பயணித்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உஜ்ஜைனின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ரூபேஷ் திவேதி கூறுகையில், காட்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நீமுச்சிற்கு சென்று கொண்டிருக்கையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இன்று (செப்டம்பர் 26) அதிகாலை நர்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் பயணித்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உஜ்ஜைனின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ரூபேஷ் திவேதி கூறுகையில், காட்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நீமுச்சிற்கு சென்று கொண்டிருக்கையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.