ETV Bharat / bharat

தெர்மாகோல் உதவியுடன் முட்டை பொரிக்கும் இயந்திரம் - கரோனா காலத்தில் உயர்ந்த தன்னம்பிக்கை மனிதர்!

24 வடக்கு பர்கானாஸ் (மேற்கு வங்கம்) : கரோனா பெருந்தொற்றின் மத்தியில் வேலையிழந்த மனீஷ், தெர்மாகோல் பெட்டியின் உதவியுடன் இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளது அதன் தனிச் சிறப்பு. முதலில் 100 முட்டைகளுடன் இந்த இயந்திரத்தை அவர் சோதித்துப் பார்த்தபோது, அவற்றில் 90 முட்டைகள் பொரிந்துள்ளன. அப்போது முதல் மனிஷ் நிற்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

author img

By

Published : Nov 20, 2020, 5:25 PM IST

Updated : Nov 20, 2020, 5:31 PM IST

Breaking News

கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில் பலரது தொழில்களும் முடங்கியுள்ளது. பலரும் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். பொருளாதார மந்தநிலை தலைவிரித்தாடுகிறது. ஆனால் இத்தகைய பொருளாதார சூழலிலும் சிலர் இதற்கு நேரெதிராக தங்களது வழக்கமான வட்டத்தை விட்டு வெளியே வந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ண்து உத்வேகம் அளித்து வருகின்றனர்.

அத்தகைய மனிதர்களில் ஒருவர் தான் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ். 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம், ராமச்சந்திரபூர் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்துள்ளார். ஆனால், நல்வாய்ப்பாக வேளாண்துறை அலுவலர் ஒருவரின் மூலம் முட்டை பொரிக்கும் இயந்திரத்தை அறிய வந்து அதன் மூலம் தற்போது சிறு வியாபாரியாக உருவெடுத்துள்ளார்.

மனீஷ், வேலையிழந்து கடும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சுபிர் தாஸ் எனும் வேளாண்துறை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவரது உதவியுடன் முட்டை பொரிக்கும் இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக மனீஷ் கண்டறிந்த நிலையில், இன்று இந்த இயந்திரமே அவரது தன்னம்பிக்கைமிக்க சுய சார்பு வாழ்க்கைக்கு வித்திட்டுள்ளது.

தெர்மாகோல் பெட்டியின் உதவியுடன் இந்த இயந்திரத்தை மனீஷ் தயாரித்துள்ளது அதன் தனிச் சிறப்பு. பெட்டியின் உள்ளே வெப்பநிலையைப் பராமரிக்க சில மின்னணு பாகங்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதலில் மனீஷ் 100 முட்டைகளுடன் இந்த இயந்திரத்தை சோதித்துப் பார்த்த நிலையில், அவற்றில் 90 முட்டைகள் பொரிந்துள்ளன. அப்போது முதல் மனிஷ் நிற்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களில் சில இன்குபேட்டர்களை அவர் தயாரித்துள்ள நிலையில், இந்த இன்குபேட்டர்களுக்கான ஆர்டர்களையும் அவர் பெற்றுள்ளது அவரை சார்ந்தோரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : இடதுசாரிகளிடையே பிளவு: திரிணாமுல் கூட்டணி விவகாரத்தில் புதிய திருப்பம்!

கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில் பலரது தொழில்களும் முடங்கியுள்ளது. பலரும் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். பொருளாதார மந்தநிலை தலைவிரித்தாடுகிறது. ஆனால் இத்தகைய பொருளாதார சூழலிலும் சிலர் இதற்கு நேரெதிராக தங்களது வழக்கமான வட்டத்தை விட்டு வெளியே வந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ண்து உத்வேகம் அளித்து வருகின்றனர்.

அத்தகைய மனிதர்களில் ஒருவர் தான் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ். 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம், ராமச்சந்திரபூர் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்துள்ளார். ஆனால், நல்வாய்ப்பாக வேளாண்துறை அலுவலர் ஒருவரின் மூலம் முட்டை பொரிக்கும் இயந்திரத்தை அறிய வந்து அதன் மூலம் தற்போது சிறு வியாபாரியாக உருவெடுத்துள்ளார்.

மனீஷ், வேலையிழந்து கடும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சுபிர் தாஸ் எனும் வேளாண்துறை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவரது உதவியுடன் முட்டை பொரிக்கும் இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக மனீஷ் கண்டறிந்த நிலையில், இன்று இந்த இயந்திரமே அவரது தன்னம்பிக்கைமிக்க சுய சார்பு வாழ்க்கைக்கு வித்திட்டுள்ளது.

தெர்மாகோல் பெட்டியின் உதவியுடன் இந்த இயந்திரத்தை மனீஷ் தயாரித்துள்ளது அதன் தனிச் சிறப்பு. பெட்டியின் உள்ளே வெப்பநிலையைப் பராமரிக்க சில மின்னணு பாகங்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதலில் மனீஷ் 100 முட்டைகளுடன் இந்த இயந்திரத்தை சோதித்துப் பார்த்த நிலையில், அவற்றில் 90 முட்டைகள் பொரிந்துள்ளன. அப்போது முதல் மனிஷ் நிற்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களில் சில இன்குபேட்டர்களை அவர் தயாரித்துள்ள நிலையில், இந்த இன்குபேட்டர்களுக்கான ஆர்டர்களையும் அவர் பெற்றுள்ளது அவரை சார்ந்தோரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : இடதுசாரிகளிடையே பிளவு: திரிணாமுல் கூட்டணி விவகாரத்தில் புதிய திருப்பம்!

Last Updated : Nov 20, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.