ETV Bharat / bharat

சீனியர் மாணவர்கள் ராகிங்... 2ஆவது மாடியில் இருந்து குதித்த ஜூனியர் மாணவன்... - திப்ருகர் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை முயற்சி

அஸ்ஸாம் மாநிலத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக ஜூனியர் மாணவர் 2ஆவது மாடியிலிருந்து குதித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Assam student jumps off hostel building to escape ragging
Assam student jumps off hostel building to escape ragging
author img

By

Published : Nov 28, 2022, 4:55 PM IST

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக ஜூனியர் மாணவர் விடுதியின் 2ஆவது மாடியிலிருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பல்கலைகழகத்தில் வணிகவியல் படித்துவரும் ஆனந்த் என்ற மாணவரை 2 நாள்களுக்கு முன்பு அவரது சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது ஆனந்த் அங்கிருந்து ஓடிச்சென்று 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்கொலைக்கு தூண்டிய சீனியர் மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்று திப்ருகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று (நவம்பர் 28) கூறுகையில், ராகிங் காரணமாக திப்ருகர் பல்கலைக்கழக மாணவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கவும், அதை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் ராகிங் வேண்டாம் பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்துங்கள் எனத் தெரிவித்தார். இதனிடையே ஆனந்த்தை 4 மாதங்களுக்கும் மேலாக சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்ததாக அவரது தாயார் சரிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக ஜூனியர் மாணவர் விடுதியின் 2ஆவது மாடியிலிருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பல்கலைகழகத்தில் வணிகவியல் படித்துவரும் ஆனந்த் என்ற மாணவரை 2 நாள்களுக்கு முன்பு அவரது சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது ஆனந்த் அங்கிருந்து ஓடிச்சென்று 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்கொலைக்கு தூண்டிய சீனியர் மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்று திப்ருகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று (நவம்பர் 28) கூறுகையில், ராகிங் காரணமாக திப்ருகர் பல்கலைக்கழக மாணவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கவும், அதை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் ராகிங் வேண்டாம் பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்துங்கள் எனத் தெரிவித்தார். இதனிடையே ஆனந்த்தை 4 மாதங்களுக்கும் மேலாக சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்ததாக அவரது தாயார் சரிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.