ETV Bharat / bharat

ஆந்திராவில் பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் கைது!

author img

By

Published : Apr 30, 2022, 4:27 PM IST

ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டர்.

ஆந்திராவில் பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்த  ஆசிரியர் கைது!
ஆந்திராவில் பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் கைது!

சித்தூர் (ஆந்திர பிரதேசம்): ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பங்காரபுரம் சில்லாகுண்டாலப்பள்ளி ஆரம்பபள்ளியில் அபு (58) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்தப் பள்ளியில் படிக்கும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் 11 பேரிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரையடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பள்ளிக் குழந்தைகளை இது குறித்து அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் இந்த ஆசிரியரின் தொடர் தொல்லைகளை தாங்க முடியாத குழந்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. பின்னர் அந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாரயணனிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 29) சித்தூர் RDO ரெனுகா, மாவட்ட கல்வித்துறை அலுவலர் புருஷோத்தம் மற்றும் தாசில்தாரர் சுசீலம்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியர் அபுவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் அபு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:தாயுடன் கூட்டு சேர்ந்து மகளுக்கு பாலியல் வன்கொடுமை; மைனர் மகளுக்கு ஆண் குழந்தை

சித்தூர் (ஆந்திர பிரதேசம்): ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பங்காரபுரம் சில்லாகுண்டாலப்பள்ளி ஆரம்பபள்ளியில் அபு (58) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்தப் பள்ளியில் படிக்கும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் 11 பேரிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரையடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பள்ளிக் குழந்தைகளை இது குறித்து அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் இந்த ஆசிரியரின் தொடர் தொல்லைகளை தாங்க முடியாத குழந்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. பின்னர் அந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாரயணனிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 29) சித்தூர் RDO ரெனுகா, மாவட்ட கல்வித்துறை அலுவலர் புருஷோத்தம் மற்றும் தாசில்தாரர் சுசீலம்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியர் அபுவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் அபு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:தாயுடன் கூட்டு சேர்ந்து மகளுக்கு பாலியல் வன்கொடுமை; மைனர் மகளுக்கு ஆண் குழந்தை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.