ETV Bharat / bharat

விவசாயியை அவமானப்படுத்திய ஊழியர்கள் - மன்னிப்புக்கேட்ட மஹிந்திரா

author img

By

Published : Jan 30, 2022, 8:35 PM IST

மஹிந்திரா நிறுவனத் தலைவர் விவசாயி ஒருவரிடம் தனது ஊழியர்களின் முரட்டுத்தனமான நடத்தைக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக்கேட்டு பதிவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட மஹிந்திரா
மன்னிப்பு கேட்ட மஹிந்திரா

சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவைச்சேர்ந்த விவசாயி ஒருவர் கார் வாங்க மஹிந்திரா ஷோரூமுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக பரவி வந்தது.

இதையடுத்து மஹிந்திரா குழுமத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'எங்களின் நோக்கம் சமூகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் எழுச்சி பெறச் செய்வதே.

மேலும் தனி நபர் கண்ணியத்தினை நிலை நிறுத்துவதாகும். இதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், இது குறித்து அவசர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களுக்கு சரியான பயிற்சியுடன் ஆலோசனையும் வழங்கப்படும்’ என்று தெரிவித்திருந்தது.

அன்று என்ன நடந்தது?

சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவின் துமகுருவில் உள்ள மஹிந்திரா ஷோரூமிற்கு விவசாயியான கெம்பே கவுடா சென்றிருந்தார். அவர் பொலிரோ பிக் கார் வாங்க சென்ற போது, அந்த ஷோரூமில் உள்ள விற்பனையாளர் ஒருவர், விவசாயிடம், ’காரின் மதிப்பு 10 லட்சம் ரூபாய், உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இருக்காது’ எனக் கூறி, கெம்பே கவுடாவையும் அவரது நண்பர்களையும் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த கோபமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஷோரூம் பணியாளர்களுக்கு இடையே பெரும் பிரச்னை வெடித்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்தைக் கொண்டு வருவதாக சவால் விட்டுச் சென்ற கெம்பே கவுடா, மீண்டும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் திரும்பி வந்துள்ளார். மேலும் ஒரே நாளில் காரை டெலிவரி செய்யுமாறும் கேட்டுள்ளார்.

ஆனால், காரை டெலிவரி செய்ய 4 நாட்கள் ஆகும் எனக் கூறிய ஊழியரால், கெம்பே கவுடாவும், அவரது நண்பர்களும் பெரும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு கட்டத்தில் ஊழியர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தான், இறுதியாக மன்னிப்புக் கேட்டுள்ளார், ஊழியர். எனினும், அதன் பின்னர், ’உங்கள் ஷோரூமில் நான் கார் வாங்க விரும்பவில்லை’ என கெம்பே கவுடா கூறி திரும்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மஹிந்திரா குழுமம் இந்த ட்வீட்டினை பதிவிட்டுள்ளது. இதற்கிடையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது ஊழியர்களின் முரட்டுத்தனமான நடத்தைக்காக மன்னிப்புத் தெரிவிக்கிறேன். அவர் மீண்டும் ஷோரூமிற்கு வரவேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் அமர் ஜவான் ஜோதிக்கு அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி

சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவைச்சேர்ந்த விவசாயி ஒருவர் கார் வாங்க மஹிந்திரா ஷோரூமுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக பரவி வந்தது.

இதையடுத்து மஹிந்திரா குழுமத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'எங்களின் நோக்கம் சமூகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் எழுச்சி பெறச் செய்வதே.

மேலும் தனி நபர் கண்ணியத்தினை நிலை நிறுத்துவதாகும். இதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், இது குறித்து அவசர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களுக்கு சரியான பயிற்சியுடன் ஆலோசனையும் வழங்கப்படும்’ என்று தெரிவித்திருந்தது.

அன்று என்ன நடந்தது?

சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவின் துமகுருவில் உள்ள மஹிந்திரா ஷோரூமிற்கு விவசாயியான கெம்பே கவுடா சென்றிருந்தார். அவர் பொலிரோ பிக் கார் வாங்க சென்ற போது, அந்த ஷோரூமில் உள்ள விற்பனையாளர் ஒருவர், விவசாயிடம், ’காரின் மதிப்பு 10 லட்சம் ரூபாய், உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இருக்காது’ எனக் கூறி, கெம்பே கவுடாவையும் அவரது நண்பர்களையும் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த கோபமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஷோரூம் பணியாளர்களுக்கு இடையே பெரும் பிரச்னை வெடித்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்தைக் கொண்டு வருவதாக சவால் விட்டுச் சென்ற கெம்பே கவுடா, மீண்டும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் திரும்பி வந்துள்ளார். மேலும் ஒரே நாளில் காரை டெலிவரி செய்யுமாறும் கேட்டுள்ளார்.

ஆனால், காரை டெலிவரி செய்ய 4 நாட்கள் ஆகும் எனக் கூறிய ஊழியரால், கெம்பே கவுடாவும், அவரது நண்பர்களும் பெரும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு கட்டத்தில் ஊழியர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தான், இறுதியாக மன்னிப்புக் கேட்டுள்ளார், ஊழியர். எனினும், அதன் பின்னர், ’உங்கள் ஷோரூமில் நான் கார் வாங்க விரும்பவில்லை’ என கெம்பே கவுடா கூறி திரும்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மஹிந்திரா குழுமம் இந்த ட்வீட்டினை பதிவிட்டுள்ளது. இதற்கிடையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது ஊழியர்களின் முரட்டுத்தனமான நடத்தைக்காக மன்னிப்புத் தெரிவிக்கிறேன். அவர் மீண்டும் ஷோரூமிற்கு வரவேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் அமர் ஜவான் ஜோதிக்கு அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.