ETV Bharat / bharat

எரிவாயு விலை உயர்வு எதிரொலி - விமான கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!

author img

By

Published : Mar 1, 2021, 9:08 PM IST

டெல்லி: எரிவாயுவின் விலை 7 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், விமான கட்டணம் சர்வதேச சந்தையை ஒப்பிடுகையில் 45 முதல் 50 விழுக்காடு உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான கட்டணம்
விமான கட்டணம்

தேசிய தலைநகர் டெல்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு 3,663 ரூபாய் உயர்ந்து 59,400.91 ரூபாயாக விற்கப்படுவதாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 16ஆம் தேதி, விமான எரிபொருள் 55,737 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மார்ச் 1ஆம் தேதியான இன்று, மும்பையில் விமான எரிவாயுவின் விலை 57,519.65 ரூபாயாக உள்ளது. சென்னையில் 60,758.61 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 63,828.81 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜிஎஸ்டியின் கீழ் எரிவாயுவை கொண்டு வர வேண்டும். எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக இது உள்ளது. விமான கட்டணத்தின் மொத்த விலையில் எரிவாயுவின் விலை மட்டும் 30 விழுக்காட்டிற்கு மேலாகும்” என்றார்.

சர்வதேச சந்தையை ஒப்பிடுகையில், இந்தியாவில் விமான எரிவாயுவின் விலை 45 முதல் 50 விழுக்காடு வரை அதிகமாக உள்ளது. மிக குறைந்த விலையில் இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2021 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 66.78 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இன்டிகோ அதே காலாண்டில் 620 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. விமான கட்டணத்தில் பெரும் பங்கு மாநில வரியாக உள்ளது. இதன் காரணமாகவே, விமான கட்டணம் அதிகமாக உள்ளது. மே 25ஆம் தேதி, உள்ளூர் விமான சேவை தொடங்கியதிலிருந்து விமான எரிவாயுவின் விலை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீக் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகர் டெல்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு 3,663 ரூபாய் உயர்ந்து 59,400.91 ரூபாயாக விற்கப்படுவதாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 16ஆம் தேதி, விமான எரிபொருள் 55,737 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மார்ச் 1ஆம் தேதியான இன்று, மும்பையில் விமான எரிவாயுவின் விலை 57,519.65 ரூபாயாக உள்ளது. சென்னையில் 60,758.61 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 63,828.81 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜிஎஸ்டியின் கீழ் எரிவாயுவை கொண்டு வர வேண்டும். எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக இது உள்ளது. விமான கட்டணத்தின் மொத்த விலையில் எரிவாயுவின் விலை மட்டும் 30 விழுக்காட்டிற்கு மேலாகும்” என்றார்.

சர்வதேச சந்தையை ஒப்பிடுகையில், இந்தியாவில் விமான எரிவாயுவின் விலை 45 முதல் 50 விழுக்காடு வரை அதிகமாக உள்ளது. மிக குறைந்த விலையில் இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2021 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 66.78 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இன்டிகோ அதே காலாண்டில் 620 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. விமான கட்டணத்தில் பெரும் பங்கு மாநில வரியாக உள்ளது. இதன் காரணமாகவே, விமான கட்டணம் அதிகமாக உள்ளது. மே 25ஆம் தேதி, உள்ளூர் விமான சேவை தொடங்கியதிலிருந்து விமான எரிவாயுவின் விலை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீக் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.