ETV Bharat / bharat

அதானி குழும பங்குகள் 10 சதவீதம் உயர்வு!

author img

By

Published : Jan 30, 2023, 12:22 PM IST

பங்குச்சந்தையில் இன்று காலை முதலே அதானி குழும பங்குகள் 10 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது.

அதானி பங்குகள் 10 சதவீதம் உயர்வு!
அதானி பங்குகள் 10 சதவீதம் உயர்வு!

டெல்லி: அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஜனவரி 27 அன்று அதானி குழுமம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. முக்கியமாக, தங்களை உயர்த்தி காட்டுவதற்காக அதானி பங்குகள் மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்ததில், ரூ.4.17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதற்கு அதானி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் 413 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அதானி குழுமம் நேற்று (ஜன.29) வெளியிட்டது.

இதில் இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட வர்த்தக தாக்குதல் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜன.30) காலை முதலே அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. பிஎஸ்இயின் படி, அதானி எண்டர்பிரைசஸ் 10 சதவீதம் உயர்ந்து ரூ.3,038.35 ஆகவும், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவை 10 சதவீதம் உயர்ந்து ரூ.658.45 ஆகவும் உள்ளது.

இருப்பினும் அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஸன் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகியவை 17 சதவீதம் வரை சரிந்தன. மேலும் அதானியின் 5 இதர நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. இதன்படி, அதானி பவர் 5 சதவீதம் சரிந்து ரூ.235.65 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஸன் 13 சதவீதம் சரிந்து ரூ.1,746.70 ஆகவும், அதானி கிரீன் எனர்ஜி 11 சதவீதம் சரிந்து ரூ.1,320 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் 17 சதவீதம் சரிந்து ரூ.2,425 ஆகவும் மற்றும் அதானி வில்மர் 5 சதவீதம் சரிந்து ரூ.491.45 ஆகவும் உள்ளது.

அதேநேரம் ஏசிசி லிமிடெட் 9 சதவீதம் உயர்ந்து ரூ.2,055.10 ஆகவும் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் 10 சதவீதம் உயர்ந்து ரூ.419.25 ஆகவும் உள்ளது.

இதையும் படிங்க: புதிய ஆண்டில் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம்

டெல்லி: அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஜனவரி 27 அன்று அதானி குழுமம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. முக்கியமாக, தங்களை உயர்த்தி காட்டுவதற்காக அதானி பங்குகள் மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்ததில், ரூ.4.17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதற்கு அதானி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் 413 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அதானி குழுமம் நேற்று (ஜன.29) வெளியிட்டது.

இதில் இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட வர்த்தக தாக்குதல் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜன.30) காலை முதலே அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. பிஎஸ்இயின் படி, அதானி எண்டர்பிரைசஸ் 10 சதவீதம் உயர்ந்து ரூ.3,038.35 ஆகவும், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவை 10 சதவீதம் உயர்ந்து ரூ.658.45 ஆகவும் உள்ளது.

இருப்பினும் அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஸன் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகியவை 17 சதவீதம் வரை சரிந்தன. மேலும் அதானியின் 5 இதர நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. இதன்படி, அதானி பவர் 5 சதவீதம் சரிந்து ரூ.235.65 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஸன் 13 சதவீதம் சரிந்து ரூ.1,746.70 ஆகவும், அதானி கிரீன் எனர்ஜி 11 சதவீதம் சரிந்து ரூ.1,320 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் 17 சதவீதம் சரிந்து ரூ.2,425 ஆகவும் மற்றும் அதானி வில்மர் 5 சதவீதம் சரிந்து ரூ.491.45 ஆகவும் உள்ளது.

அதேநேரம் ஏசிசி லிமிடெட் 9 சதவீதம் உயர்ந்து ரூ.2,055.10 ஆகவும் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் 10 சதவீதம் உயர்ந்து ரூ.419.25 ஆகவும் உள்ளது.

இதையும் படிங்க: புதிய ஆண்டில் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.