ETV Bharat / bharat

1,300 அடி உயரத்தில் மோதிக்கொண்ட கேபிள் கார்கள்... உயிருக்கு போராடிய 48 பேர்...

author img

By

Published : Apr 11, 2022, 1:21 PM IST

Updated : Apr 11, 2022, 5:46 PM IST

ஜார்கண்ட் மாநிலம் திரிகுட் மலைப்பகுதியில் 1,286 அடி உயரத்தில் இரண்டு கேபிள் கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 48 அந்தரத்தில் சிக்கினர்.

2-dead-in-jharkhand-cable-car-accident
2-dead-in-jharkhand-cable-car-accident

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் திரிகுட் மலைப்பகுதியில் நேற்று (ஏப். 10) 1,286 அடி உயரத்தில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். 19 கேபிள் கார்களில் 48 பேர் அந்தரத்தில் சிக்கினர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி 22 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.

திரிகுட் மலைத்தொடர்

இதனிடையே கேபிள் கார்களில் மாட்டியிருந்த நான்கு பேர் குதித்து தப்பிக்க முயன்றனர். அவர்களுக்கும் படுகாயாம் ஏற்பட்டது. இதுகுறித்து, துணை காவல் ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறுகையில், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள், மீட்ப்புக்குழுவினர் உதவியுடன் சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுவருகின்றனர். இதுவரை 22 பேர் மீட்கப்பட்டனர். 26 பேரை மீட்கும் பணி நடந்துவருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்" என்றார்.

திரிகுட் மலை கேபிள் கார்கள்

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் திரிகுட் மலைப்பகுதியில் 20 கி.மீ. தொலைவிற்கு 1,286 அடி உயரத்தில் கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரோப்வேயில் மொத்தம் 25 கேபின்கள் உள்ளன. இங்குள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கேபிள் கார்களில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இங்குள்ள மலை சிகரங்கள் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். அப்போது கேபிள் கார்களிலிருந்து நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், சிகரங்களை காணலாம். இதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இதையும் படிங்க: திடீரென பழுதாகிய ஜிப்லைன்... 1,000 அடி உயரத்தில் சிக்கிய பெண்...

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் திரிகுட் மலைப்பகுதியில் நேற்று (ஏப். 10) 1,286 அடி உயரத்தில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். 19 கேபிள் கார்களில் 48 பேர் அந்தரத்தில் சிக்கினர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி 22 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.

திரிகுட் மலைத்தொடர்

இதனிடையே கேபிள் கார்களில் மாட்டியிருந்த நான்கு பேர் குதித்து தப்பிக்க முயன்றனர். அவர்களுக்கும் படுகாயாம் ஏற்பட்டது. இதுகுறித்து, துணை காவல் ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறுகையில், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள், மீட்ப்புக்குழுவினர் உதவியுடன் சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுவருகின்றனர். இதுவரை 22 பேர் மீட்கப்பட்டனர். 26 பேரை மீட்கும் பணி நடந்துவருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்" என்றார்.

திரிகுட் மலை கேபிள் கார்கள்

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் திரிகுட் மலைப்பகுதியில் 20 கி.மீ. தொலைவிற்கு 1,286 அடி உயரத்தில் கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரோப்வேயில் மொத்தம் 25 கேபின்கள் உள்ளன. இங்குள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கேபிள் கார்களில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இங்குள்ள மலை சிகரங்கள் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். அப்போது கேபிள் கார்களிலிருந்து நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், சிகரங்களை காணலாம். இதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இதையும் படிங்க: திடீரென பழுதாகிய ஜிப்லைன்... 1,000 அடி உயரத்தில் சிக்கிய பெண்...

Last Updated : Apr 11, 2022, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.