ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி கருக்கலைப்பு செய்யலாமா - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன? - SUPREME COURT

டெல்லி: பாலியல் வன்கொடுமைக்குள்ளான பாதிக்கப்பட்ட சிறுமி, 26 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Mar 2, 2021, 8:35 PM IST

ஹரியானா மாநிலம் கர்ணல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை, அவரது உறவினரே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமான நிலையில், போக்சோ சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 26 வார கால கருவை கலைக்க அனுமதி வழங்கும்படி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மருத்துவ ஆய்வுக்குள்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 14 வயது சிறுமி தாக்கல்செய்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கருக்கலைப்புச் சட்டம் கூறுவது என்ன?

கர்ப்பமாகி 20 வார காலத்திற்குப் பிறகு கருவைக் கலைக்க மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் தடை விதிக்கிறது. ஆனால், கர்ப்பம் தொடர்ந்தால் தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனப் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்பட்சத்தில், கருவைக் கலைக்க அச்சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

ஹரியானா மாநிலம் கர்ணல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை, அவரது உறவினரே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமான நிலையில், போக்சோ சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 26 வார கால கருவை கலைக்க அனுமதி வழங்கும்படி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மருத்துவ ஆய்வுக்குள்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 14 வயது சிறுமி தாக்கல்செய்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கருக்கலைப்புச் சட்டம் கூறுவது என்ன?

கர்ப்பமாகி 20 வார காலத்திற்குப் பிறகு கருவைக் கலைக்க மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் தடை விதிக்கிறது. ஆனால், கர்ப்பம் தொடர்ந்தால் தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனப் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்பட்சத்தில், கருவைக் கலைக்க அச்சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.