ETV Bharat / bharat

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் 12 நேபாள சிறுமிகள் கைது

ஜெய்ப்பூரில் இருந்து எத்தியோப்பியாவிற்கு செல்ல இருந்த 12 நேபாள சிறுமிகள் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ஆணையர்களால் தடுத்து வைக்கப்பட்டனர்.

author img

By

Published : Jan 7, 2023, 11:18 AM IST

Etv Bharatஜெய்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட 12 நேபாள சிறுமிகள் - பின்னனி என்ன?
Etv Bharatஜெய்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட 12 நேபாள சிறுமிகள் - பின்னனி என்ன?

ஜெய்பூர்: நேபாள தூதரகத்தின் தகவலின் பேரில் ஜெய்ப்பூரில் இருந்து எத்தியோப்பியா செல்ல இருந்த 12 நேபாள சிறுமிகளை ஜெய்ப்பூர் விமான நிலைய ஆணையத்தின் உதவியுடன் ஜெய்ப்பூர் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிறுமிகளுக்கு நேபாள அரசு NOC (No Objection Certificate) வழங்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிபி ராஜீவ் பச்சார் கூறுகையில், ‘நேபாள தூதரகம் மூலம் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் 12 நேபாள சிறுமிகள் சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சிறுமிகளின் ஆவணங்கள் சரிபார்த்தோம்.

அதில் No Objection Certificate இல்லாததால் கைது செய்தோம் எனத் தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் வலுக்கட்டாயமாக துபாய்க்கு அனுப்பபடும் போது ஜெய்ப்பூர் விமான நிலைய சோதனையில் அடையாளம் காணப்பட்டனர். இதுபோன்று அதிக சம்பளம் தருவதாக கூறி நேபாளத்தில் இருந்து பல சிறுமிகளை டெல்லிக்கு அழைத்து வந்து சிலர் துபாய்க்கு அனுப்ப முயற்சித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:நடுவானில் சக பயணியை இருமுறை காப்பாற்றிய பிரிட்டிஷ் இந்தியர்

ஜெய்பூர்: நேபாள தூதரகத்தின் தகவலின் பேரில் ஜெய்ப்பூரில் இருந்து எத்தியோப்பியா செல்ல இருந்த 12 நேபாள சிறுமிகளை ஜெய்ப்பூர் விமான நிலைய ஆணையத்தின் உதவியுடன் ஜெய்ப்பூர் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிறுமிகளுக்கு நேபாள அரசு NOC (No Objection Certificate) வழங்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிபி ராஜீவ் பச்சார் கூறுகையில், ‘நேபாள தூதரகம் மூலம் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் 12 நேபாள சிறுமிகள் சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சிறுமிகளின் ஆவணங்கள் சரிபார்த்தோம்.

அதில் No Objection Certificate இல்லாததால் கைது செய்தோம் எனத் தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் வலுக்கட்டாயமாக துபாய்க்கு அனுப்பபடும் போது ஜெய்ப்பூர் விமான நிலைய சோதனையில் அடையாளம் காணப்பட்டனர். இதுபோன்று அதிக சம்பளம் தருவதாக கூறி நேபாளத்தில் இருந்து பல சிறுமிகளை டெல்லிக்கு அழைத்து வந்து சிலர் துபாய்க்கு அனுப்ப முயற்சித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:நடுவானில் சக பயணியை இருமுறை காப்பாற்றிய பிரிட்டிஷ் இந்தியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.