இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 788 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆந்திராவில் கடந்த 3 நாள்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும்.
தற்போது தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று (ஜூன்.1) 3,207 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 35ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்து 79 ஆயிரத்து 085 ஆக உள்ளது. தற்போது 17 லட்சத்து 93 ஆயிரத்து 645 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை, மொத்தமாக 21 கோடியே 85 லட்சத்து 46 ஆயிரத்து 667 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.