சென்னை: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் முடிச்சூர் சாலையில் ராஜேஸ்வரன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தின் முதல்தளம் மற்றும் தரைதளத்தில் எலக்ட்ரிக் பொருட்கள் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று திடீரென முதல் தளத்தில் கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் முதல் தளம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் பணிபுரிந்து கொண்டிருந்த பத்திற்கும் மேற்பட்டோர் வெளியில் ஓடி வந்தனர். பின்னர், தகவலின் அடிப்படையில்,இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தாம்பரம் தீயணைப்புப் படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருவதாக பீர்க்கங்கரனை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.