thumbnail

ஜோடியாக சப்போட்டா சாப்பிட வந்த கரடிகள்.. நெல்லை அருகே பரபரப்பு.. வைரலாகும் வீடியோ! - wild bear in residential area

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 10:58 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. 

இந்த நிலையில், வீரவநல்லூர் அடுத்துள்ள வல்லத்து நம்பி குளம் பகுதியில் உள்ள சுந்தர்ராஜன் என்பவரது வீட்டில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 கரடிகள், அங்குள்ள தோட்டத்தில் இருக்கும் சப்போட்டா பழங்களைச் சாப்பிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், இரவு நேரங்களில் கரடி நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உலா வரும் கரடிகளை வனத்துறையினர் கண்காணித்து, கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.