அரசுப் பெண்கள் விடுதியில் நள்ளிரவில் புகுந்த திருடன்.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - Theft in Govt ladies hostel

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 10:57 PM IST

thumbnail
மர்ம நபர் மாணவிகள் விடுதியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமாக, ஈவேரா பெரியார் சாலையில் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், மாணவிகள் தங்கி இருக்கும் ஒவ்வொரு அறையாகச் சென்று 6 செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். அதனையடுத்து, செல்போன்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், விடுதி மேற்பார்வையாளர் பாக்கியலட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் தங்கி இருக்கும் அரசு விடுதியில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடிச் சென்றது, மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், மர்ம நபர் செல்போன்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.