thumbnail

தொட்டபெட்டா மலை சிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..! - Doddabetta Peak

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் சீசன் நிலவி வருகிறது. இரண்டாம் சீசன் முன்னிட்டு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று (அக்.06 ) ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்தில், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மற்ற நாட்களை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது.

இதனையடுத்து, தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள இயற்கை காட்சிகள், உதகை நகரம், வானுயர்ந்த மரங்கள், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட சமவெளி பிரதேசங்களின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.