குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி.. வனத்துறை நடவடிக்கை! - Bear Entered Coonoor Residence
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jun 30, 2024, 10:43 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-06-2024/640-480-21835274-thumbnail-16x9-coonoor.jpg)
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் அதிகளவில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நகரப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உலா வருவது வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு குன்னூர் அருகே உள்ள ஓட்டு பட்டறை வசந்தம் நகர் மற்றும் சேலாஸ் நேரு நகர் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று புகுந்துள்ளது. இதனையடுத்து, இது குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் தீப்பந்தங்களுடன் கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் உணவு கழிவுகளை நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் சேமித்து தர வேண்டும். கிராமப் பகுதியில் குப்பைகளை வீசிச் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தனியே செல்வதை தவிர்க்க வேண்டும். கரடியை விரட்ட முற்படக்கூடாது, வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.