கூடலூரில் பலாமரத்தை உலுக்கி பசியாற்றிய யானை.. வைரல் வீடியோ! - elephant trying to jackfruit
🎬 Watch Now: Feature Video


Published : Mar 14, 2024, 5:45 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் அதிக அளவு வெயிலின் தாக்கம் காணப்படுவதால், ஆறு மற்றும் குளங்கள் வறண்டு வருவதாலும், உணவு மற்றும் குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் படையெடுத்து வரத் துவங்கி உள்ளன.
இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதி பெரிய சோலை எனும் இடத்தில், தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை உணவுக்காக மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிப்பதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டது. தொடர்ந்து பலமுறை முயற்சி செய்ததில், இரண்டு பலாக்காய்கள் மட்டுமே கீழே விழுந்தது. அதனை உண்ணாமல், அப்பகுதியிலிருந்து யானை வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த வீடியோ பதிவை அருகில் உள்ள மக்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், இப்பகுதியில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், யானைகளைக் காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.