ETV Bharat / state

ரூ.10,000 கோடி கொடுத்தாலும்...தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! - BREAKING CM SPEECH

ரூ.2,000 கோடிக்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால், தமிழ் சமூகம் 2000 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2025, 1:08 PM IST

Updated : Feb 22, 2025, 10:48 PM IST

திருப்பயர்: கடலூர் மாவட்டம், திருப்பயரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 'அப்பா' என்ற செயலியை அவர் வெளியிட்டார். 'Aanaithu Palli Parent Teachers Association' என்பதன் சுருக்கமே 'APPA' என்பதாகும். பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கல்வியை முதன்மையாக கற்பிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும் கூடியிருக்கும் மாநாடு இது. தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்தைப் பார்த்து நாடே வியக்கிறது. தமிழ்நாடு அரசு செய்வது எல்லாமே சாதனை தான். அதில் கல்வித் துறையில் நிறைய சாதனைகளை செய்துள்ளோம். நான் ஆசிரியரும் அல்ல..மாணவரும் அல்ல.. நான் பெற்றோர்களில் ஒருவன். உங்களது மனதில் உள்ளதை உணர்ந்து செயல்படுத்தி வருகிறேன். திராவிட மாடல் என்பது பள்ளிகளை திறந்தோம். மாணவர்களை படிக்க வைத்தோம். மதிப்பெண் எடுக்க வைத்தோம். வெளியே அனுப்பினோம் என்பதோடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு முடிவடைந்து விடவில்லை. ஒவ்வொரு மாணவரும் அரசின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்த்து வருகிறோம்.

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு புகழாரம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பாக செயல்படுகிறார். அவரது காலம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம். பள்ளிக் கல்வித்துறையை இந்தியாவின் 2-வது இடத்திற்கு உயர்த்தியவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 80,000 ஆசிரியர்களுக்கு கைக் கணினிகளை வழங்கியுள்ளார். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகரித்துள்ளார். போட்டிகளில் வென்ற மாணவர்களை மட்டுமல்லாமல், ஆசிரியர்களையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

"பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" நிகழ்ச்சி (@sivasankarssdmk)

பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு பாராட்டு

தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துக் கூறுவதற்கான நல்வாய்ப்பு இந்த மாநாடு. அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் ஏராளமான நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் குறைந்த விலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பரிசுகள் வழங்கி பெற்றோர் ஆசிரியர் கழகம் கௌரவித்து வருகிறது.

அரசுக்கு கல்வியும் மருத்துவமும் இரு கண்கள்

தமிழ்நாடு அரசுக்கு கல்வி மற்றும் மருத்துவம் இரு கண்கள். இந்த ஆண்டு மட்டும் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான கல்வி வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களின் இடைநிற்றலை களையவே இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களை ஒன்றிய அரசு பாராட்டு

தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களை ஒன்றிய அரசு மனதார பாராட்டியுள்ளது. ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு ரூ.2,152 கோடி நிதியை தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும், மாணவர்களுக்கும் வேட்டு வைக்கிற கொள்கை. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரி அல்ல. ஆனால், எந்த மொழியை திணித்தாலும் அதனை உறுதியாக எதிர்ப்போம். இந்தியை திணிப்பதற்காக மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக் கூடங்களில் இருந்து விரட்டுகிற கொள்கை அது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?

தேசிய கல்விக் கொள்கை நாம் கடைபிடிக்கிற சமூகநீதிக் கொள்கை நீர்த்துப் போகச் செய்துவிடும். பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தேசிய கல்விக் கொள்கை மறுக்கிறது. 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு என பிள்ளைகளை வடிகட்ட பார்க்கிறார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மருத்துவத்திற்கு நீட் போல், பொறியியல் மற்றும் கலைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் அபாயம் உள்ளது. படிக்காமல் போ என்பது தான் தேசிய கல்விக் கொள்கை. படித்து முன்னேற நினைப்பவர்களை குலத் தொழில் செய் என தள்ளுவது தான் தேசிய கல்விக் கொள்கை. இதனால் தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக சொல்கிறோம்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் வேண்டாம்!

ரூ.10,000 கோடி கிடைக்கும் என்றாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கையெழுத்து போட மாட்டோம். ரூ.2,000 கோடிக்காக கையெழுத்துப் போட்டால், தமிழ் சமூகம் 2000 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளப்படும். அந்த பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒரு போதும் செய்யமாட்டேன்.

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு”

இந்தியை திணிக்க நினைத்தால், 'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்பதை தமிழ்நாடு காட்டிவிடும். இருமொழி கொள்கையால், தமிழ்நாடு மாணவர்களின் திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார். அவருக்கான பதில் என்னவென்றால், எங்களது மொழியை அழிக்க எந்த செயலையும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். கடந்த 72 ஆண்டுகளில் 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. நிதியைக் கொடுங்க என கேட்டால், தமிழ் மீது பிரதமர் அக்கறை கொண்டுள்ளார் என ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார்.

தமிழுக்கு பிரதமர் என்ன செய்து விட்டார்?

தமிழுக்காக பிரதமர் இதுவரை என்ன செய்துவிட்டார்? சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,488 கோடி - அந்த மொழியை பேசுபவர்கள் சில ஆயிரம் பேர் தான். 8 கோடி மக்கள் பேசும் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி வெறும் ரூ.74 கோடி மட்டுமே... இது தான் தமிழை நீங்கள் வளர்க்கிற லட்சணமா?

தேசிய கல்விக் கொள்கை ஒருபோதும் வராது!

பள்ளிக் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றாலும், திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். அது உறுதி. தமிழ்நாடு மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமானால், குழந்தைகளை தனித்திறமை கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். கல்வியில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமை.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருப்பயர்: கடலூர் மாவட்டம், திருப்பயரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 'அப்பா' என்ற செயலியை அவர் வெளியிட்டார். 'Aanaithu Palli Parent Teachers Association' என்பதன் சுருக்கமே 'APPA' என்பதாகும். பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கல்வியை முதன்மையாக கற்பிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும் கூடியிருக்கும் மாநாடு இது. தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்தைப் பார்த்து நாடே வியக்கிறது. தமிழ்நாடு அரசு செய்வது எல்லாமே சாதனை தான். அதில் கல்வித் துறையில் நிறைய சாதனைகளை செய்துள்ளோம். நான் ஆசிரியரும் அல்ல..மாணவரும் அல்ல.. நான் பெற்றோர்களில் ஒருவன். உங்களது மனதில் உள்ளதை உணர்ந்து செயல்படுத்தி வருகிறேன். திராவிட மாடல் என்பது பள்ளிகளை திறந்தோம். மாணவர்களை படிக்க வைத்தோம். மதிப்பெண் எடுக்க வைத்தோம். வெளியே அனுப்பினோம் என்பதோடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு முடிவடைந்து விடவில்லை. ஒவ்வொரு மாணவரும் அரசின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்த்து வருகிறோம்.

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு புகழாரம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பாக செயல்படுகிறார். அவரது காலம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம். பள்ளிக் கல்வித்துறையை இந்தியாவின் 2-வது இடத்திற்கு உயர்த்தியவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 80,000 ஆசிரியர்களுக்கு கைக் கணினிகளை வழங்கியுள்ளார். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகரித்துள்ளார். போட்டிகளில் வென்ற மாணவர்களை மட்டுமல்லாமல், ஆசிரியர்களையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

"பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" நிகழ்ச்சி (@sivasankarssdmk)

பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு பாராட்டு

தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துக் கூறுவதற்கான நல்வாய்ப்பு இந்த மாநாடு. அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் ஏராளமான நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் குறைந்த விலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பரிசுகள் வழங்கி பெற்றோர் ஆசிரியர் கழகம் கௌரவித்து வருகிறது.

அரசுக்கு கல்வியும் மருத்துவமும் இரு கண்கள்

தமிழ்நாடு அரசுக்கு கல்வி மற்றும் மருத்துவம் இரு கண்கள். இந்த ஆண்டு மட்டும் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான கல்வி வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களின் இடைநிற்றலை களையவே இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களை ஒன்றிய அரசு பாராட்டு

தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களை ஒன்றிய அரசு மனதார பாராட்டியுள்ளது. ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு ரூ.2,152 கோடி நிதியை தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும், மாணவர்களுக்கும் வேட்டு வைக்கிற கொள்கை. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரி அல்ல. ஆனால், எந்த மொழியை திணித்தாலும் அதனை உறுதியாக எதிர்ப்போம். இந்தியை திணிப்பதற்காக மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக் கூடங்களில் இருந்து விரட்டுகிற கொள்கை அது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?

தேசிய கல்விக் கொள்கை நாம் கடைபிடிக்கிற சமூகநீதிக் கொள்கை நீர்த்துப் போகச் செய்துவிடும். பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தேசிய கல்விக் கொள்கை மறுக்கிறது. 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு என பிள்ளைகளை வடிகட்ட பார்க்கிறார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மருத்துவத்திற்கு நீட் போல், பொறியியல் மற்றும் கலைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் அபாயம் உள்ளது. படிக்காமல் போ என்பது தான் தேசிய கல்விக் கொள்கை. படித்து முன்னேற நினைப்பவர்களை குலத் தொழில் செய் என தள்ளுவது தான் தேசிய கல்விக் கொள்கை. இதனால் தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக சொல்கிறோம்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் வேண்டாம்!

ரூ.10,000 கோடி கிடைக்கும் என்றாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கையெழுத்து போட மாட்டோம். ரூ.2,000 கோடிக்காக கையெழுத்துப் போட்டால், தமிழ் சமூகம் 2000 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளப்படும். அந்த பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒரு போதும் செய்யமாட்டேன்.

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு”

இந்தியை திணிக்க நினைத்தால், 'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்பதை தமிழ்நாடு காட்டிவிடும். இருமொழி கொள்கையால், தமிழ்நாடு மாணவர்களின் திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார். அவருக்கான பதில் என்னவென்றால், எங்களது மொழியை அழிக்க எந்த செயலையும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். கடந்த 72 ஆண்டுகளில் 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. நிதியைக் கொடுங்க என கேட்டால், தமிழ் மீது பிரதமர் அக்கறை கொண்டுள்ளார் என ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார்.

தமிழுக்கு பிரதமர் என்ன செய்து விட்டார்?

தமிழுக்காக பிரதமர் இதுவரை என்ன செய்துவிட்டார்? சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,488 கோடி - அந்த மொழியை பேசுபவர்கள் சில ஆயிரம் பேர் தான். 8 கோடி மக்கள் பேசும் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி வெறும் ரூ.74 கோடி மட்டுமே... இது தான் தமிழை நீங்கள் வளர்க்கிற லட்சணமா?

தேசிய கல்விக் கொள்கை ஒருபோதும் வராது!

பள்ளிக் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றாலும், திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம். அது உறுதி. தமிழ்நாடு மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமானால், குழந்தைகளை தனித்திறமை கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். கல்வியில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமை.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Last Updated : Feb 22, 2025, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.