ETV Bharat / technology

SpaceX: ஏழு மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!

ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் (SpaceX Dragon) விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மாதங்கள் தங்கியிருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களின் குழுவை பூமிக்குக் கொண்டுவந்தது.

SpaceX Dragon Safely Returns Crew-8 Astronauts To Earth After 7 Months On ISS
ஏழு மாதங்களுக்குப் பிறகு 4 விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம். (SpaceX)
author img

By ETV Bharat Tech Team

Published : 2 hours ago

பென்சகோலா, புளோரிடா: போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் ஏற்பட்ட தொடர்ச்சியான கோளாறுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி ஆய்வாளர்கள் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் நீடித்தது. இதனைத்தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மாதங்கள் தங்கியிருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களின் குழுவை ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) டிராகன் விண்கலம் பூமிக்குக் கொண்டுவந்தது.

நான்கு க்ரூ-8 விண்வெளி வீரர்கள் தரையிறக்கப்பட்டனர். மார்ச் 2024-இல் தொடங்கப்பட்ட க்ரூ-8 மிஷன், நாசா விண்வெளி வீரர்களான மேத்யூ டொமினிக் (Matthew Dominick), மைக்கேல் பாராட் (Michael Barratt), ஜீனெட் எப்ஸ் (Jeanette Epps) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கிரெபென்கின் (Alexander Grebenkin) ஆகியோரை உள்ளடக்கியது.

இந்த குழு விண்வெளியில் 232 நாள்கள் செலவழித்தது, பூமியை 3,760 முறை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கிட்டத்தட்ட 100 மில்லியன் மைல்கள் இவர்கள் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் வந்த ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் கடலில் விழுந்தவுடன், மீட்புக் குழுக்கள் டிராகன் விண்கலத்தை விரைவாகப் பாதுகாத்து மீட்டனர். அப்படியே க்ரூ-8 உறுப்பினர்களுடன் விண்கலத்தை தங்கள் மீட்புக் கப்பலில் ஏற்றினர். அதன்பிறகு, மீட்பு கப்பலில் பாதுகாப்பாக விண்கலத்தின் உள்ளிருந்த நான்கு பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மேம்பட்ட சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க
  1. விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?
  2. 60 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் தவிக்கும் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? நாசா கூறுவது என்ன?
  3. மனித ஆய்வு ரோவர் சவாலில் நாசாவின் விருதுகளை பெற்ற இந்திய மாணவர்கள் குழு!

க்ரூ-9 உடன் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்:

க்ரூ-8 டிராகன் விண்கலம் ஆரம்பத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் உள்ளிட்ட போயிங் ஸ்டார்லைனர் க்ரூ ஃப்ளைட் சோதனை விண்வெளி வீரர்களுக்கு அவசரகால விண்கலமாக சேவை அளிக்கும் எனத் திட்டமிடப்பட்டது.

ஆனால், நாசா இறுதியில் வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை க்ரூ-9 டிராகனில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 2025-இல் இவர்கள் இருவரையும் பூமிக்குக் கொண்டுவர நாசா முடிவுசெய்துள்ளது.

சுமார் 140 நாள்களாக விண்வெளி நிலையத்தில் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் வரவைக் காத்து உலக நாடுகளே காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை பத்திரமாக மீட்க நாசா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.

பென்சகோலா, புளோரிடா: போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் ஏற்பட்ட தொடர்ச்சியான கோளாறுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி ஆய்வாளர்கள் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் நீடித்தது. இதனைத்தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மாதங்கள் தங்கியிருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களின் குழுவை ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) டிராகன் விண்கலம் பூமிக்குக் கொண்டுவந்தது.

நான்கு க்ரூ-8 விண்வெளி வீரர்கள் தரையிறக்கப்பட்டனர். மார்ச் 2024-இல் தொடங்கப்பட்ட க்ரூ-8 மிஷன், நாசா விண்வெளி வீரர்களான மேத்யூ டொமினிக் (Matthew Dominick), மைக்கேல் பாராட் (Michael Barratt), ஜீனெட் எப்ஸ் (Jeanette Epps) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கிரெபென்கின் (Alexander Grebenkin) ஆகியோரை உள்ளடக்கியது.

இந்த குழு விண்வெளியில் 232 நாள்கள் செலவழித்தது, பூமியை 3,760 முறை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கிட்டத்தட்ட 100 மில்லியன் மைல்கள் இவர்கள் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் வந்த ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் கடலில் விழுந்தவுடன், மீட்புக் குழுக்கள் டிராகன் விண்கலத்தை விரைவாகப் பாதுகாத்து மீட்டனர். அப்படியே க்ரூ-8 உறுப்பினர்களுடன் விண்கலத்தை தங்கள் மீட்புக் கப்பலில் ஏற்றினர். அதன்பிறகு, மீட்பு கப்பலில் பாதுகாப்பாக விண்கலத்தின் உள்ளிருந்த நான்கு பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மேம்பட்ட சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க
  1. விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?
  2. 60 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் தவிக்கும் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? நாசா கூறுவது என்ன?
  3. மனித ஆய்வு ரோவர் சவாலில் நாசாவின் விருதுகளை பெற்ற இந்திய மாணவர்கள் குழு!

க்ரூ-9 உடன் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்:

க்ரூ-8 டிராகன் விண்கலம் ஆரம்பத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் உள்ளிட்ட போயிங் ஸ்டார்லைனர் க்ரூ ஃப்ளைட் சோதனை விண்வெளி வீரர்களுக்கு அவசரகால விண்கலமாக சேவை அளிக்கும் எனத் திட்டமிடப்பட்டது.

ஆனால், நாசா இறுதியில் வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை க்ரூ-9 டிராகனில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 2025-இல் இவர்கள் இருவரையும் பூமிக்குக் கொண்டுவர நாசா முடிவுசெய்துள்ளது.

சுமார் 140 நாள்களாக விண்வெளி நிலையத்தில் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் வரவைக் காத்து உலக நாடுகளே காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை பத்திரமாக மீட்க நாசா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.