ETV Bharat / technology

பழைய மொபைல்களுக்கு பதில் சமையல் பாத்திரங்கள்... சைபர் மோசடி அம்பலம்! - new cyber crime revealed

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 14, 2024, 10:45 AM IST

Updated : Sep 14, 2024, 1:17 PM IST

Old Phone Exchange Cyber Scam: அப்பாவி மக்களை மோசடி வலையில் சிக்கவைக்க சைபர் குற்றவாளிகள் (Cyber Criminals) புதிய வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பழைய போன்களுக்கு பதிலாக சமையல் பாத்திரங்கள் தருவதாகக் கூறி ஏமாற்றி வருவதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

Cybercriminals caught in old mobile phones for steel cookware exchange scam
சைபர் குற்றம் (ETV Bharat)

ஹைதராபாத்: அதிவேகமாக தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அதே சமயத்தில், புத்தம்புது வழிகளில் சைபர் குற்றங்களும் (Cyber Crime) அரங்கேறுகின்றன. சமீபகாலமாக சிலர் பழைய செல்போன்களை வாங்கிக்கொண்டு ஸ்டீல் சமையல் பாத்திரங்களை வழங்கி வருகின்றனர். ‘என்னடா இது புதுசா இருக்கே?’ என்று எண்ண வேண்டாம். இவர்கள் லோடு ஆட்டோக்களில் சுற்றி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியில் காவல்துறையினரால் இந்த நூதன சைபர் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஆட்டோக்களில் பாத்திரங்களுடன் வரும் நபர்களின் பேச்சை நம்பி பலர் பழைய போன்களை கொடுத்து சமையலறை பாத்திரங்களை வாங்கி வருகின்றனர். ஆனால் இப்படி பழைய போன்களை கொடுத்து சமையல் பாத்திரங்களை வாங்கும் முன் ஒருமுறை யோசிக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர். ஏனெனில் இந்த செல்போன்கள் சைபர் மோசடி செய்பவர்களுக்கு விற்கப்படுகின்றன

வடக்கில் இருந்து இயங்கும் சைபர் குற்றவாளிகள்:

பீகாரில் சிலர் பழைய செல்போன்களை மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்து வாங்குகின்றனர். சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கரில் இருந்து சைபர் குற்றவாளிகள் செயல்படுவதை சைபர் குற்றப்பிரிவு துறை கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து ராமகுண்டத்தில் பீகாரைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைதுசெய்து 4 ஆயிரம் பழைய போன்களை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பலத் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க: அஜித்குமாரின் புதிய போர்ஷ் கார்; ஷாலினி இன்ஸ்டா பதிவு

விசாரணையில், தாங்கள் மொத்தமாக ஸ்மார்ட்போன்களை பழைய விலைக்கு முகவர்களிடம் இருந்து வாங்குவோம். பின்னர், அதில் இருக்கும் தகவல்களை திரட்ட முயற்சிப்போம். அதன்பின், கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சைபர் மோசடியில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளனர். இது சைபர் குற்றப்பிரிவு (Cyber Crime) காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பழைய போன்களை விற்கும்போது கவனம்:

பழைய செல்போன்களை விற்கும் போது யாருக்கு விற்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பழைய போன்கள் வேறு ஒருவரின் கைகளுக்குச் செல்லும்போது, அவர்களை குறித்த முழு விவரமும் நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஏனெனில் இவை மற்றவர்களை ஏமாற்றப் பயன்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது.. அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான்

நிசாமாபாத் மாவட்டத்தின் முக்கிய இடங்களான கங்காஸ்தான், மாருதிநகர், விநாயகநகர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களா அல்லது உள்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா என்பதை கண்டறிய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு சந்தேகம் இருப்பின் தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை உயர் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சைபர் குற்றவாளிகளுக்கு உதவும் பழைய போன்கள்:

பழைய ஸ்மார்ட்போன்களில் உள்ள தரவு, UPI ஐடிகள், எண்கள் மற்றும் புகைப்படங்கள் திருடப்படலாம். இல்லையேல் உங்கள் பழைய போனை ரிப்பேர் செய்து சிம் கார்டை போட்டு ஏமாற்றி விடுவார்கள். மொபைல் ஐஎம்இஐ எண் (IMEI No) வாயிலாக காவல்துறையினர் விசாரிக்கும் போது, ​​அதன் உரிமையாளர் யார் என்ற விவரம் வெளிவரும். இதன் காரணமாக, குற்றவாளி தப்பியோடவும், செல்போன் உரிமையாளர் காவல்துறையினரிடம் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் பழைய போனை விற்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

ஹைதராபாத்: அதிவேகமாக தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அதே சமயத்தில், புத்தம்புது வழிகளில் சைபர் குற்றங்களும் (Cyber Crime) அரங்கேறுகின்றன. சமீபகாலமாக சிலர் பழைய செல்போன்களை வாங்கிக்கொண்டு ஸ்டீல் சமையல் பாத்திரங்களை வழங்கி வருகின்றனர். ‘என்னடா இது புதுசா இருக்கே?’ என்று எண்ண வேண்டாம். இவர்கள் லோடு ஆட்டோக்களில் சுற்றி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியில் காவல்துறையினரால் இந்த நூதன சைபர் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஆட்டோக்களில் பாத்திரங்களுடன் வரும் நபர்களின் பேச்சை நம்பி பலர் பழைய போன்களை கொடுத்து சமையலறை பாத்திரங்களை வாங்கி வருகின்றனர். ஆனால் இப்படி பழைய போன்களை கொடுத்து சமையல் பாத்திரங்களை வாங்கும் முன் ஒருமுறை யோசிக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர். ஏனெனில் இந்த செல்போன்கள் சைபர் மோசடி செய்பவர்களுக்கு விற்கப்படுகின்றன

வடக்கில் இருந்து இயங்கும் சைபர் குற்றவாளிகள்:

பீகாரில் சிலர் பழைய செல்போன்களை மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்து வாங்குகின்றனர். சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கரில் இருந்து சைபர் குற்றவாளிகள் செயல்படுவதை சைபர் குற்றப்பிரிவு துறை கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து ராமகுண்டத்தில் பீகாரைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைதுசெய்து 4 ஆயிரம் பழைய போன்களை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பலத் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க: அஜித்குமாரின் புதிய போர்ஷ் கார்; ஷாலினி இன்ஸ்டா பதிவு

விசாரணையில், தாங்கள் மொத்தமாக ஸ்மார்ட்போன்களை பழைய விலைக்கு முகவர்களிடம் இருந்து வாங்குவோம். பின்னர், அதில் இருக்கும் தகவல்களை திரட்ட முயற்சிப்போம். அதன்பின், கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சைபர் மோசடியில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளனர். இது சைபர் குற்றப்பிரிவு (Cyber Crime) காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பழைய போன்களை விற்கும்போது கவனம்:

பழைய செல்போன்களை விற்கும் போது யாருக்கு விற்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பழைய போன்கள் வேறு ஒருவரின் கைகளுக்குச் செல்லும்போது, அவர்களை குறித்த முழு விவரமும் நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஏனெனில் இவை மற்றவர்களை ஏமாற்றப் பயன்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது.. அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான்

நிசாமாபாத் மாவட்டத்தின் முக்கிய இடங்களான கங்காஸ்தான், மாருதிநகர், விநாயகநகர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களா அல்லது உள்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா என்பதை கண்டறிய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு சந்தேகம் இருப்பின் தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை உயர் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சைபர் குற்றவாளிகளுக்கு உதவும் பழைய போன்கள்:

பழைய ஸ்மார்ட்போன்களில் உள்ள தரவு, UPI ஐடிகள், எண்கள் மற்றும் புகைப்படங்கள் திருடப்படலாம். இல்லையேல் உங்கள் பழைய போனை ரிப்பேர் செய்து சிம் கார்டை போட்டு ஏமாற்றி விடுவார்கள். மொபைல் ஐஎம்இஐ எண் (IMEI No) வாயிலாக காவல்துறையினர் விசாரிக்கும் போது, ​​அதன் உரிமையாளர் யார் என்ற விவரம் வெளிவரும். இதன் காரணமாக, குற்றவாளி தப்பியோடவும், செல்போன் உரிமையாளர் காவல்துறையினரிடம் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் பழைய போனை விற்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Last Updated : Sep 14, 2024, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.