ETV Bharat / state

விடாது துரத்தும் வழக்குகள்.. மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது! - SAVUKKU SHANKAR

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:00 PM IST

Savukku Shankar arrested: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சவுக்கு சங்கர், முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றில் சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்து, நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்படுவதற்கான ஆவணங்களை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரிடம் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட போலீசார், அவரை கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.

கன்னியாகுமரி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கிய பெரம்பலூர் நீதிமன்றம்!

கோயம்புத்தூர்: பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றில் சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்து, நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்படுவதற்கான ஆவணங்களை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரிடம் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட போலீசார், அவரை கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.

கன்னியாகுமரி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கிய பெரம்பலூர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.