ETV Bharat / state

முதல் தலைமுறையை குறிவைக்கும் விஜயின் அரசியல் வியூகம் பலிக்குமா? - ஓட்டாக மாறுமா ஊக்கத்தொகை? - TVK Vijay Political Strategy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 5:32 PM IST

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்குவதன் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை குறி வைத்துள்ளாரா? இந்த வியூகம் அவருக்கு பலிக்குமா? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நடிகர் விஜய் புகைப்படம்
நடிகர் விஜய் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக அரசியலைப் பொறுத்தவரை, சினிமாத்துறையில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்தவர்களே அதிகம். அந்த வகையில், திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் சினிமாவில் இருந்து வந்தவர்களே.

குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து மக்கள் திலகமாக மாறியவர். அவரது திரைப்பிம்பம் அவரின் அரசியல் அடித்தளத்திற்கு பெரிதும் உதவியது. அவரைப் பார்த்து அரசியலுக்கு வந்த பலரும் சோபிக்கவில்லை. காரணம், எம்ஜிஆர் படங்களிலிருந்த புரட்சிகர கருத்துகள் மற்றும் எம்ஜிஆரின் நாயக பிம்பம். எம்ஜிஆர் போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், தமிழ் சினிமாவில் எழுத்தாளராக வலம் வந்தவர் தான். அவரும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து வந்து தமிழக அரசியலில் தடம் பதித்தார். இப்படி தமிழ் சினிமாவில் இருந்து பெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்திகளாக விளங்கிய நிலையில், தமிழ் சினிமா நாயகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவைத் தவிர மற்ற கட்சிகள் இங்கு போதிய வரவேற்பு பெறவில்லை என்பதே நிதர்சனம். மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியை இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வளர்த்தெடுத்தார்.‌ ஆனால், தற்போது தேமுதிகவின் நிலை தமிழக அரசியலில் சற்று தடுமாறிய நிலையிலேயே இருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், திராவிட கட்சிக்குள்ளேயே ஐக்கியமாகிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று பின்வாங்கி விட்டார்.

அவ்வாறு இருக்கும் போது, நடிகர் விஜய் தற்போது அரசியல் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்க்கும் அரசியல் ஆசை வந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால், அதற்காக சட்டென வராமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது அடியை எடுத்து வைப்பது பாராட்டுக்குரியது. கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தற்போது வரை ஆன்லைன் மூலம் விறுவிறுப்பாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார்.

எங்கு தொட்டால் பொன் கிடைக்கும் என்பதை அறிந்த அவர், விழுதை விட்டுவிட்டு வேரை பிடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அவருக்கு ஓட்டு போடுவார்கள் என்பது அறிந்ததே. ஆனால் அதுமட்டும் போதுமா என்ன? அதனால் தான் தற்போது, முதல் தலைமுறை வாக்காளர்களை குறிவைத்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இது மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இதற்கு முன்பு திரைப் பிரபலங்கள் யாரும் தொடாத பாதையாக இதனை நடிகர் விஜய் தேர்வு செய்துள்ளார் என கூறும் இணைய வாசிகள் அரசியல் குறித்தோடு, திராவிடம் குறித்தோ இந்த வயதில் அறியாத மாணவர்களை குறிவைத்து இதனை செய்து அதனை பிற்காலத்தில் வாக்காக அறுவடை செய்யலாம் என திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாக கருத்து கூறி வருகின்றனர்.

அதன்படி, இந்தாண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி வருகிறார். இதன் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை குறிவைத்துள்ளார். இது அவருக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பார்க்க முடியும்.

அந்த வகையில் விஜயின் இந்த அரசியல் வியூகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும், இனி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார்.‌ இன்றைய அரசியல் காலகட்டத்தில் இவரது அரசியல் வரவு எந்த அளவுக்கு முக்கியத்துவம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன? - Vijay education award event

சென்னை: தமிழக அரசியலைப் பொறுத்தவரை, சினிமாத்துறையில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்தவர்களே அதிகம். அந்த வகையில், திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் சினிமாவில் இருந்து வந்தவர்களே.

குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து மக்கள் திலகமாக மாறியவர். அவரது திரைப்பிம்பம் அவரின் அரசியல் அடித்தளத்திற்கு பெரிதும் உதவியது. அவரைப் பார்த்து அரசியலுக்கு வந்த பலரும் சோபிக்கவில்லை. காரணம், எம்ஜிஆர் படங்களிலிருந்த புரட்சிகர கருத்துகள் மற்றும் எம்ஜிஆரின் நாயக பிம்பம். எம்ஜிஆர் போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், தமிழ் சினிமாவில் எழுத்தாளராக வலம் வந்தவர் தான். அவரும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து வந்து தமிழக அரசியலில் தடம் பதித்தார். இப்படி தமிழ் சினிமாவில் இருந்து பெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்திகளாக விளங்கிய நிலையில், தமிழ் சினிமா நாயகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவைத் தவிர மற்ற கட்சிகள் இங்கு போதிய வரவேற்பு பெறவில்லை என்பதே நிதர்சனம். மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியை இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வளர்த்தெடுத்தார்.‌ ஆனால், தற்போது தேமுதிகவின் நிலை தமிழக அரசியலில் சற்று தடுமாறிய நிலையிலேயே இருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், திராவிட கட்சிக்குள்ளேயே ஐக்கியமாகிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று பின்வாங்கி விட்டார்.

அவ்வாறு இருக்கும் போது, நடிகர் விஜய் தற்போது அரசியல் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்க்கும் அரசியல் ஆசை வந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால், அதற்காக சட்டென வராமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது அடியை எடுத்து வைப்பது பாராட்டுக்குரியது. கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தற்போது வரை ஆன்லைன் மூலம் விறுவிறுப்பாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார்.

எங்கு தொட்டால் பொன் கிடைக்கும் என்பதை அறிந்த அவர், விழுதை விட்டுவிட்டு வேரை பிடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அவருக்கு ஓட்டு போடுவார்கள் என்பது அறிந்ததே. ஆனால் அதுமட்டும் போதுமா என்ன? அதனால் தான் தற்போது, முதல் தலைமுறை வாக்காளர்களை குறிவைத்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இது மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இதற்கு முன்பு திரைப் பிரபலங்கள் யாரும் தொடாத பாதையாக இதனை நடிகர் விஜய் தேர்வு செய்துள்ளார் என கூறும் இணைய வாசிகள் அரசியல் குறித்தோடு, திராவிடம் குறித்தோ இந்த வயதில் அறியாத மாணவர்களை குறிவைத்து இதனை செய்து அதனை பிற்காலத்தில் வாக்காக அறுவடை செய்யலாம் என திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாக கருத்து கூறி வருகின்றனர்.

அதன்படி, இந்தாண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி வருகிறார். இதன் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை குறிவைத்துள்ளார். இது அவருக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பார்க்க முடியும்.

அந்த வகையில் விஜயின் இந்த அரசியல் வியூகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும், இனி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார்.‌ இன்றைய அரசியல் காலகட்டத்தில் இவரது அரசியல் வரவு எந்த அளவுக்கு முக்கியத்துவம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன? - Vijay education award event

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.