ETV Bharat / state

“சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை”.. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திருமாவளவன் கருத்து! - BSP Armstrong Murder

BSP Armstrong Murder case: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், இவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்றும், கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 3:36 PM IST

Updated : Jul 6, 2024, 3:49 PM IST

திருமாவளவன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் புகைப்படம்
திருமாவளவன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு (ஜூலை 5) மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்ற கொலையாளிகளை வலைவீசித் தேடிவந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் 8 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், போலீசாரிடம் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

சரணடைந்துள்ளவர்களை கைது செய்துவிட்டோம் என்று புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையான குற்றவாளிகள், தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. மேலும், அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ளோம். அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்ய பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுத்துள்ளது. விசிகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறது. எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை பரீசிலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள் கொலை செய்வது தொடர்கிறது. தற்போது அரசியல் தலைவர் இல்லத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். இது போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை கண்டறிந்து கட்டுப்படுத்த தவறினால், தமிழக அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு (ஜூலை 5) மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்ற கொலையாளிகளை வலைவீசித் தேடிவந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் 8 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், போலீசாரிடம் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

சரணடைந்துள்ளவர்களை கைது செய்துவிட்டோம் என்று புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. உண்மையான குற்றவாளிகள், தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. மேலும், அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ளோம். அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்ய பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுத்துள்ளது. விசிகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறது. எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை பரீசிலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள் கொலை செய்வது தொடர்கிறது. தற்போது அரசியல் தலைவர் இல்லத்தின் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். இது போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை கண்டறிந்து கட்டுப்படுத்த தவறினால், தமிழக அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை!

Last Updated : Jul 6, 2024, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.