ETV Bharat / state

வடபழனியில் ஆந்திர இளைஞரை கடத்திய மர்ம கும்பல்..2 பேரை கைது செய்து போலீசார் அதிரடி!

வடபழனியில் ஆந்திர இளைஞரை மர்ம கும்பல் காரில் கடத்திய சம்பவம் தொடர்பாக 2 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

கைது செய்யப்பட்ட சுரேந்திர ரெட்டி  மற்றும் வெங்கடா ஜெய மணிகண்டன்
கைது செய்யப்பட்ட சுரேந்திர ரெட்டி மற்றும் வெங்கடா ஜெய மணிகண்டன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆந்திரபிரதேசம் மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சென்னை, வடபழனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரது நண்பர் பாஸ்கர் என்பவருடன் வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் தினேஷை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவரது நண்பர் பாஸ்கர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில், தினேஷை கடத்திச் சென்ற வெள்ளை நிற கார் மற்றும் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜோலார்பேட்டை திருப்பதி ரோடு, மன்னார் பொலுரு நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வெள்ளை காரை மடக்கிப் பிடித்த போலீசார், கடத்தப்பட்ட தினேஷை பத்திரமாக மீட்டு காரை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கோவை அருகே லாரி மோதி முதியவர் உயிரிழப்பு..பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

தொடர்ந்து, கடத்தல் சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுரேந்திர ரெட்டி (21 ) மற்றும் வெங்கடா ஜெய மணிகண்டன் (20) ஆகிய 2 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுரேந்திர ரெட்டியிடம் கடத்தப்பட்ட தினேஷ் என்பவர் கடனாக பணம் வாங்கியதும், அதனை திரும்பி தராத காரணத்தினால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தினேஷை கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை: ஆந்திரபிரதேசம் மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சென்னை, வடபழனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் அவரது நண்பர் பாஸ்கர் என்பவருடன் வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் தினேஷை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவரது நண்பர் பாஸ்கர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில், தினேஷை கடத்திச் சென்ற வெள்ளை நிற கார் மற்றும் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜோலார்பேட்டை திருப்பதி ரோடு, மன்னார் பொலுரு நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வெள்ளை காரை மடக்கிப் பிடித்த போலீசார், கடத்தப்பட்ட தினேஷை பத்திரமாக மீட்டு காரை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கோவை அருகே லாரி மோதி முதியவர் உயிரிழப்பு..பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

தொடர்ந்து, கடத்தல் சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுரேந்திர ரெட்டி (21 ) மற்றும் வெங்கடா ஜெய மணிகண்டன் (20) ஆகிய 2 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுரேந்திர ரெட்டியிடம் கடத்தப்பட்ட தினேஷ் என்பவர் கடனாக பணம் வாங்கியதும், அதனை திரும்பி தராத காரணத்தினால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தினேஷை கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.